பட்னவிஸ் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா

தங்களிடம் போது மான உறுப்பினர்கள் ஆதரவு இல்லாததால், மஹாராஷ்டிரா முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக பட்னவிஸ் ராஜினாமாசெய்வதாக அறிவித்தார்.

மஹாராஷ்டிராவில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.  இதையடுத்து, மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. திடீர்திருப்பமாக, தேசியவாத காங்., கட்சியை சேர்ந்த அஜித் பவார் ஆதரவுடன், 23ல், பா.ஜ., ஆட்சி அமைத்தது. முதல்வராக, பா.ஜ., வின் தேவேந்திர பட்னவிசும், துணைமுதல்வராக அஜித் பவாரும் பதவியேற்றனர். இதை எதிர்த்து, சிவசேனா, காங்., தேசியவாத காங்., ஆகிய கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இதனைவிசாரித்த நீதிமன்றம், நாளை (நவ.,27) சட்டசபையை கூட்டவும், மாலைக்குள் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் நிருபர்களை சந்தித்த முதல்வர் பட்னவிஸ் கூறியதாவது: பாஜ-சிவசேனா கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளித்தனர். 105 எம்எல்ஏக்கள் பா.ஜ.,வுக்கு கிடைத்தனர். தனிபெரும் கட்சியான பா.ஜ.,வுக்கு ஆட்சிஅமைக்கும் உரிமை உள்ளது. சிவசேனாவைவிட பா.ஜ., கூடுதல் தொகுதிகளைபெற்றது. முதல்வர் பதவி வழங்குவோம் என சிவசேனாவுக்கு எப்போதும் வாக்கு அளிக்க வில்லை. ஆனால், சிவசேனா பேரம்பேசும் வியூகத்தை கையாண்டது. முதல்வர் பதவி கேட்டு சிவசேனா மிரட்டல் விடுத்தது.

தேர்தல் முடிவு வெளியாகி, பா.ஜ.,வுக்கு சீட்கள் குறைந்த உடனே சிவ சேனா மற்ற கட்சிகளுடன் பேச ஆரம்பித்துவிட்டது. பொய்சொல்லி, பா.ஜ.,வை காத்திருக்க வைத்தது. ஆதரவுகேட்டு மற்ற கட்சிகளிடம் கெஞ்சதுவங்கியது. பால் தாக்கரே குடும்பத்தினர் மற்றகட்சிகளிடம் கெஞ்சினர்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபைகுழு தலைவர் அஜித்பவார் ஆதரவு அளித்த காரணத்தினால்தான் பதவி ஏற்றோம். எங்களிடம் போதுமான உறுப்பினர்கள் ஆதரவு இல்லை. ஆதரவை தொடர முடியாது என அஜித் பவார் கூறிவிட்டதால்,பதவி விலகுகிறேன்.ராஜினாமா கடிதத்தை கவர்னருக்கு அளிக்க உள்ளேன்.

சட்டசபையில் பா.ஜ., எதிர்க் கட்சியாக செயல்படும் கடந்த 5 ஆண்டுகள் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாடு பட்டோம். அடுத்து அமையும் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் ஆட்சி நிலையான ஆட்சி அமையாக இருக்காது.புது அரசு, நெருக்கடியின் கீழ்தான் செயல்படும். அதிகாரத்திற்காக அலையும் சிவசேனா, காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பின்னர் கவர்னரை சந்தித்து, ராஜினாமா கடிதத்தை பட்னவிஸ் கொடுத்தார். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...