அஜித்பவார் ஏமாற்றவில்லை, சிவசேனாதான் ஏமாற்றியது

பாஜகவை என்.சி.பி மூத்த தலைவர் அஜித்பவார் ஏமாற்றவில்லை, சிவசேனாதான் ஏமாற்றியது என்று பாஜக தேசியதலைவர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிராவின் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார். .

அங்கு பாஜகவிற்கு அளித்தவந்த ஆதரவை என்சிபியின் அஜித் பவார் வாபஸ் வாங்கினார்.இதனால் அங்கு அஜித்பவார் துணை முதல்வர் பதவியில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிஸும் விலகினார்.

இந்நிலையில் நியூஸ்18 சேனலின் ஜார்கண்ட் தேர்தல் நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அதில், மகாராஷ்டிராவில் தனித்த பெரியகட்சியாக இருந்தும்கூட எங்களால் ஆட்சி அமைக்க முடியவில்லை. அங்கு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா கட்சிக்கு அதிகாரமோகம்.

அதனால் அவர்கள் இணைந்துள்ளனர். அவர்களுக்கு என்று ஒருகொள்கை இல்லை. அஜித் பவார் எங்களுக்கு ஆதரவு அளித்ததை தவறு என்றோ, தவறானகணிப்பு என்றோ சொல்லலாம். ஆனால் அவர் எங்களை ஏமாற்றிவிட்டார் என்று சொல்லமாட்டேன். சரத் பவாரும் எங்களை ஏமாற்றவில்லை.

சரியாக சொல்லப்போனால் என்சிபியும் எங்களை ஏமாற்ற வில்லை. என்சிபி எங்களை எப்போதும் எதிர்த்து இருக்கிறது. ஆனால் எங்களை உத்தவ் தாக்கரேதான் எங்களை ஏமாற்றி உள்ளார். சிவசேனா கட்சி தான் எங்களை ஏமாற்றி இருக்கிறது. சிவசேனா எங்களுடன் தான் இணைந்து போட்டியிட்டது.

ஆனால் மக்களை மதிக்காமல் அவர்கள்கூட்டணி மாறியுள்ளனர். இதுபோன்ற சமயங்களில் தொண்டர்கள் கோபம் அடைவார்கள். எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்.

ஆனால் அதைபற்றி நான் இப்போது பேசமாட்டேன். நாங்கள் எப்போது சிவசேனாவிற்கு முதல்வர் பதவியை தருவோம் என்று கூறவே இல்லை. ஆனால் சிவசேனா பொய்சொல்கிறது. அவர்களுக்கு மக்கள் பாடம் கற்றுத்தருவார்கள்.

அஜித்பவாருக்கு எதிரான வழக்கு அவர் எங்களுடன் இருந்தாலும் தொடர்ந்து இருக்கும். அது உறுதி. நாங்கள் எங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். யார் கொள்கைமாறி கூட்டணி வைத்தது என்று மக்களுக்கு தெரியும், என்று அமித் ஷா கோபமாக குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...