அஜித்பவார் ஏமாற்றவில்லை, சிவசேனாதான் ஏமாற்றியது

பாஜகவை என்.சி.பி மூத்த தலைவர் அஜித்பவார் ஏமாற்றவில்லை, சிவசேனாதான் ஏமாற்றியது என்று பாஜக தேசியதலைவர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிராவின் முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார். .

அங்கு பாஜகவிற்கு அளித்தவந்த ஆதரவை என்சிபியின் அஜித் பவார் வாபஸ் வாங்கினார்.இதனால் அங்கு அஜித்பவார் துணை முதல்வர் பதவியில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து தேவேந்திர பட்னாவிஸும் விலகினார்.

இந்நிலையில் நியூஸ்18 சேனலின் ஜார்கண்ட் தேர்தல் நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அதில், மகாராஷ்டிராவில் தனித்த பெரியகட்சியாக இருந்தும்கூட எங்களால் ஆட்சி அமைக்க முடியவில்லை. அங்கு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா கட்சிக்கு அதிகாரமோகம்.

அதனால் அவர்கள் இணைந்துள்ளனர். அவர்களுக்கு என்று ஒருகொள்கை இல்லை. அஜித் பவார் எங்களுக்கு ஆதரவு அளித்ததை தவறு என்றோ, தவறானகணிப்பு என்றோ சொல்லலாம். ஆனால் அவர் எங்களை ஏமாற்றிவிட்டார் என்று சொல்லமாட்டேன். சரத் பவாரும் எங்களை ஏமாற்றவில்லை.

சரியாக சொல்லப்போனால் என்சிபியும் எங்களை ஏமாற்ற வில்லை. என்சிபி எங்களை எப்போதும் எதிர்த்து இருக்கிறது. ஆனால் எங்களை உத்தவ் தாக்கரேதான் எங்களை ஏமாற்றி உள்ளார். சிவசேனா கட்சி தான் எங்களை ஏமாற்றி இருக்கிறது. சிவசேனா எங்களுடன் தான் இணைந்து போட்டியிட்டது.

ஆனால் மக்களை மதிக்காமல் அவர்கள்கூட்டணி மாறியுள்ளனர். இதுபோன்ற சமயங்களில் தொண்டர்கள் கோபம் அடைவார்கள். எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும்.

ஆனால் அதைபற்றி நான் இப்போது பேசமாட்டேன். நாங்கள் எப்போது சிவசேனாவிற்கு முதல்வர் பதவியை தருவோம் என்று கூறவே இல்லை. ஆனால் சிவசேனா பொய்சொல்கிறது. அவர்களுக்கு மக்கள் பாடம் கற்றுத்தருவார்கள்.

அஜித்பவாருக்கு எதிரான வழக்கு அவர் எங்களுடன் இருந்தாலும் தொடர்ந்து இருக்கும். அது உறுதி. நாங்கள் எங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம். யார் கொள்கைமாறி கூட்டணி வைத்தது என்று மக்களுக்கு தெரியும், என்று அமித் ஷா கோபமாக குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சிணுங்கியின் மருத்துவக் குணம்

இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...