நக்சலிசத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுள்ளது

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்ட சபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு  நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டங்களாக வாக்குப் பதிவுகள் நடைபெறுகின்றன.

முதல்கட்டமாக 6 மாவட்டங்களில் உள்ள சத்ரா, கும்லா, பிஷ்னுபூர், லோகர்தாகா, மணிகா, லதேஹர், பாங்கி, தால்டோகஞ்ச், பிஷ்ராம்பூர், சாதாரோர், ஹூசைனியாபாத், கார்வா மற்றும் பகவந்த்பூர் என 13 தொகுதிகளில் நவம்பர் 30-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவை சந்திக்கும் தொகுதிகளில் தேர்தல்பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் ஜாம்ஷெட்பூர் மாவட்டத்தில் பழங் குடியின மக்கள் அதிகம்வசிக்கும் பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம்செய்து வருகிறார்.

இன்றைய பிரசார கூட்டத்தில் பேசிய மோடி கூறியதாவது:-

ராமர் இளவரசராக அயோத்தியை விட்டு 14 ஆண்டுகள் வன வாசம் சென்றார். காடுகளில் ஆதிவாசி மக்களுடன் வாழ்ந்து பழகிய பின்னர் ‘மரியாதை புருஷோத்தமன்’ ஆக மீண்டும் அயோத்திக்குவந்து நாடாண்டார்.

ஜார்ஜண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ் கூட்டணி இங்கு ஆட்சிசெய்த போது முதல் மந்திரி நாற்காலி விலைக்கு விற்கப்பட்டது. அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஊழலும் கொள்ளையும்தான் முக்கிய செய்திகளாக வந்தனர். பல தலைவர்கள் இன்னும் ஊழல் வழக்குகளை சந்தித்து வருகின்றனர்.

ஜார்ஜண்ட் முக்தி மோர்ச்சா – காங்கிரஸ்  கூட்டணி அரசியல் வஞ்சகம் மற்றும் துரோகத்தின் அடிப்படை யிலானது. பாஜகவின் அரசியல் மக்கள் சேவையை அடிப்படையாக கொண்டது. எங்கள் ஆட்சிக்காலத்தில் நக்சலிசத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்ட வாக்குப் பதிவு முடிந்தவுடன் பதிவான வாக்கு சதவீதத்தை வைத்து பார்க்கும் போது பாஜக மீதும் தாமரை சின்னத்தின் மீதும் மக்களவைத்துள்ள நம்பிக்கை மிகதெளிவாக தெரிகிறது. இந்த மாநிலத்தின் முன்னேற்றத்தை பாஜக ஆட்சியால்மட்டுமே உறுதிப்படுத்த முடியும் என ஜார்க்கண்ட் மக்கள் நம்புகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...