அஸ்ஸாமில் என்ன நடக்கிறது?

என்னுடன் சிலவருடங்கள் முன்பாக ஒரு BPOவில் பணியாற்றிய #மணிப்பூர் மற்றும் #அசாம் மாநிலங்களை சேர்ந்த 2 நண்பர்களை தொடர்புகொண்டு வடகிழக்கு மாநிலங்களில் தற்போது நிலவிவரும் வன்முறை, அமைதியின்மை, கலவரம் தொடர்பாக பேசினேன்.

அவர்கள் இருவருமே சொன்னது இதுதான் —

“#BJP ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக குடியுரிமை திருத்தசட்டம் (citizenship amendment) வரும் என்பது பொதுவாகவே எதிர்பார்த்த ஒன்றுதான். ஏனென்றால், பாஜகவின் தேர்தல் வாக்குறுதியிலேயே (Election manifesto) இது ஒருமுக்கியமான விஷயம்.

பங்களாதேசத்திலிருந்து தப்பி வந்த ஹிந்துவுக்கு ஆதரவாகவும் பங்களாதேசத்திலிருந்து ஊடுருவிய முஸ்லிமுக்கு எதிராகவும் கிட்டத் தட்ட 30-40 வருடங்களாக BJP அதிகாரப்பூர்வ நிலைபாடு எடுத்தது அஸ்ஸாமியர் எல்லோரும் அறிந்தவிஷயம்.

#CAB யை அமல் படுத்துவதுவதன் மூலம் #பாஜக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறது. விஷயம் இவ்வளவுதான். இதை ஊதி பெரிதாக்குவதன் மூலம் அஸ்ஸாமில் 30%க்கும் மேலான முஸ்லிம்களின் ஓட்டுக்காகவே காங்கிரஸ் மற்றும் #AIUDF தலைவர் பத்ருதீன் அஜ்மல் திட்டம்போட்டு அரசுக்கு எதிராக கலவரத்தை பின்னே இருந்து நடத்துகிறது. திரிணாமுல் காங்கிரசின் பிரதான ஓட்டு வங்கியோ பங்களாதேஷி முஸ்லிம்கள். அதற்காகவே மம்தாபானர்ஜியும் தன்பங்குக்கு முஸ்லிம் குழுக்களை ஏவி விடுகிறார்” என்றார்.

சரி அதுபோகட்டும், அப்பாவி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என கேட்டேன். “குழப்பதில்தான் இருக்கிறார்கள்… எனினும், வரும் நாட்களில் சரியாகிவிடும். யாரும் காங்கிரஸ் கட்சியையோ முஸ்லிம் அமைப்புகளையோ நம்ப தயாராக இல்லை. இருந்தாலும், ஒவ்வொரு ஹிந்துவுக்கும் ‘ஹிந்துஉணர்வு’ என்பதும் ‘ஹிந்து-ஒற்றுமை’ என்பதும் ரொம்ப அவசியம்” என்று முடித்தார்.

அன்புடன்
வெங்கடேஷ்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

மாதுளையின் மருத்துவ குணம்

புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...