மக்களுக்கு சேவை செய்வதற்கான அனைத்தையும் செய்ய வேண்டும்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, ஒன்பது மாநிலங்களில் சட்ட சபைத் தேர்தல் நடக்க விருக்கிறது. இந்நிலையில், அதற்கான வேலைகளை ஏற்கெனவே பாஜக தொடங்கிவிட்டது. அதன் முன்னேற்பாடாக பா.ஜ.க-வின் இரண்டு நாள் தேசியசெயற்குழுக் கூட்டம் ஜனவரி 16, 17 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற்றது. இதில், கர்நாடக சட்ட சபைத் தேர்தல் உட்பட வரும் நாடாளுமன்ற தேர்தல்கள் குறித்தும் ஆலோசிக்கப் பட்டன.

அதில், 2024 -ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வின் திட்டம் குறித்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். அதைத்தொடர்ந்து பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், “பிரதமர் மோடி இந்தக்கூட்டத்தின் மூலம் நம்மிடம் பல செய்திகளைப் பகிர்ந்திருக்கிறார். அதில் குறிப்பிடத் தக்கவற்றில் சிலவற்றை கவனப் படுத்துகிறேன்.

நம்மிடம் 400 நாள்கள் இருக்கின்றன. மக்களுக்கு சேவைசெய்வதற்கான அனைத்தையும் செய்யவேண்டும். சரித்திரம் படைக்க வேண்டும். 18-25 வயதுக்குட்பட்டவர்கள் மீது நமது கவனத்தை முழுமையாகச் செலுத்தவேண்டும். ஏனென்றால், அவர்களுக்கு சரித்திரமோ, முந்தைய அரசுகளின் தவறான நிர்வாகம் பற்றிய தகவல்களோ அல்லது நாம் எப்படி நல்லாட்சியை நோக்கிநகர்கிறோம் என்பது பற்றிய செய்திகளோ பரிச்சயமிருக்காது.

நாம் அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஜனநாயக வழிகளை அறிமுகப்படுத்த வேண்டும். மேலும், நல்லாட்சியின் ஒருபகுதியாக இருக்க அவர்களுக்கு உதவவேண்டும். எல்லைப் பகுதிகள் உட்பட கிராமங்களின் அமைப்பை வலுப்படுத்துவதில் கட்சி கவனம் செலுத்த வேண்டும். அதன் தலைவர்கள் எல்லாத்தரப்பு மக்களையும் சந்திக்க வேண்டும். குறிப்பாக சிறுபான்மையினரான போஹ்ராக்கள், பாஸ்மந்தாக்கள், சீக்கியர்கள் உள்ளிட்ட சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் தேர்தலைக் கருத்தில் கொள்ளாமல் அணுக வேண்டும்.

பா.ஜ.க இனி ஓர்அரசியல் இயக்கம் மட்டுமல்ல, சமூக-பொருளாதார நிலைமைகளை மாற்றும் ஒருசமூக இயக்கம். இந்தியாவின் சிறந்த சகாப்தம் வரவிருக்கிறது. அதன் வளர்ச்சிக்காக நாம் நம்மை அர்ப்பணிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியிருக்கிறார். இதை கவனத்தில் கொள்ளுங்கள்” எனப் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...