மலிவுவிலையில் சுகாதாரம் என்பதே எங்கள் நோக்கம்

உ.பி., லக்னோவில் மறைந்த முன்னள் பிரதமர் வாஜ்பாயின் சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

பாஜகவின் முகமாக இருந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், உடல் நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைபலனின்றி காலமானார். அவரது பிறந்த டிசம்பர் 25ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தலைமை செயலகமான லோக்பவனில் அவரது பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.89.6 லட்சம் மதிப்பில் வாஜ்பாய்க்கு அமைக்கப்பட்டுள்ள 25 அடி உயர வெண்கலச் சிலையை ஜெய்ப்பூரைச் சேர்ந்த பிரபல சிற்பி ராஜ்குமார் பண்டிட் வடிவமைத்துள்ளார்.

இந்நிலையில் வாஜ்பாயின் 95ஆவது பிறந்த தினத்தையொட்டி லக்னோவில் உள்ள தலைமை செயலகமான லோக்பவனில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார். இந்த நிகழ்சியில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் அனந்திபென் பாட்டீல், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சிலைதிறப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து அடல் பிகாரி மருத்துவ பல்கலைக் கழகத்துக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி. “சுகாதாரம், மலிவுவிலையில் சுகாதாரத் திட்டத்தை விரிவுபடுத்துவதே எங்களது நோக்கம்” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370ஆவது பிரிவு, ராமர்கோயில் பிரச்சினைகள் சுமூகமாக முடிக்கப்பட்டன. பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்துவந்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் திட்டமும் சரி செய்யப் பட்டுள்ளது. 130 கோடி இந்தியர்களும் நம்பிக்கையுடன் இத்தகைய சவால்களுக்கான தீர்வைகண்டுள்ளனர்” பெருமிதம் தெரிவித்தார்.

அத்துடன் போரட்டம் என்றபெயரில் வன்முறையில் ஈடுபடுட்டு பொதுச் சொத்துகளுக்கு சேதம் விழைவிப் போர் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும் எனவும் பிரதமர் மோடி அப்போது வலியுறுத்தினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

சூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்

சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ...