செலவுகளைக் குறைக்க மத்திய அரசு முடிவு

தண்ட செலவுகளைக் குறைக்க மத்தியஅரசு முடிவெடுத்துள்ளதாம். அதவது கிட்டத்தட்ட 20 சதவீத அளவுக்கு வீண்செலவுகளைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு ஒன்று அனைத்து மத்திய அமைச்சர்களுக்கும் போயுள்ளதாம்.

சுற்றுப் பயணம், உணவு, ஆலோசனைக் கூட்டங்கள் உள்ளிட்டவற்றுக்காக செலவு செய்யும் தொகையில் 20 சதவீதத்தைக் குறைக்கவேண்டும் என்று உத்தரவிடப் பட்டுள்ளதாம். இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய செலவுத் துறை, நிதித்துறைக்கும் உத்தரவு போயுள்ளதாம்.

இந்த செலவுக்குறைப்பு தொடர்பான முடிவு, சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த முதலீடு மற்றும் வளர்ச்சிக்கான அமைச்சரவைக் குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்டு அமைச்சர்களுக்கு உத்தரவுகள் போயுள்ளன.

அத்தியாவசியமே இல்லாத செலவுகளுக்குத்தான் முதலில் ஆப்பு வைக்கப்படுகிறது. இதன்மூலம் நிதி இழப்பை சரிக்கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சியானது 5 சதவீத அளவே இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுவதால் நிதி சிக்கலை சமாளிக்க செலவுக் குறைப்பை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.

செலவுக் குறைப்பில் மத்திய அரசு இறங்குவது இது முதல்முறையல்ல. கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதமும் இதுபோல செலவுக் குறைப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட்டது. அப்போது அது 10 சதவீதமாக இருந்தது. இப்போது 20 சதவீதமாக இரட்டிப்பாகியுள்ளது

செலவு குறைப்பு நடவடிக்கைகளில் ஒருபகுதியாக, அரசுத் துறைகள் சார்பில் நடத்தப்படும் கண்காட்சிகள், விழாக்கள், கருத்தரங்குகள், மாநாடுகளிலும் சிக்கணத்தை கடை பிடிக்குமாறும் அறிவுறுத்த பட்டுள்ளதாம். அதேபோல வாகனங்கள் வாங்குவது, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களைக் குறைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...