தமிழகம் ஒருபோதும் புறக்கணிக்கப்பட வில்லை

பாஜக மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் கள்ளக்குறிச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணியில் எந்தமாற்றமும் இல்லை.

மழைவெள்ள பாதிப்பு குறித்து மத்தியக்குழு பார்வையிட்டு சென்றநிலையில், மழை பாதிப்புநிவாரணத் தொகை இதுவரைதமிழகத்துக்கு வழங்கப்படவில்லை என்று கூறுகின்றனர். பேரிடர் மேலாண்மை நிதி, பேரிடர் காலத்துக்கு முன்னரே மத்திய அரசு நிதி ஒதுக்கும். அந்த விஷயத்தை மாநில அரசுகள் கூறுவதில்லை.

பேரிடருக்குப் பிறகு மத்தியக்குழு ஆய்வு செய்து மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கை அளித்துள்ளது. அதனடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும். மேலும், தற்போது ஆளும் திமுக அரசானது பாதிக்கபட்ட விவசாய நிலங்கள் குறித்து முறையாக பதிவுசெய்திருந்தால் கண்டிப்பாக மத்திய அரசிடம் இருந்து நிதி வரப் பெற்றிருக்கும்.

நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழகத்துக்கு வலுசேர்க்கும் வகையில் திட்டங்கள் உருவாகும். ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு சிறப்பாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் தமிழகத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தமிழகம் ஒருபோதும் புறக்கணிக்கப்படவில்லை. கடந்த 7 ஆண்டுகளில் மத்திய பட்ஜெட்டில் ரூ.7.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சாலை மேம்பாட்டு பணிகளுக்காக மட்டும் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது.

பெட்ரோல் விலையில், மாநில அரசு வரிகளைக்குறைத்து, விலையைக் குறைக்க பாஜக போராட்டம் நடத்திவருகிறது. பாஜகவின் சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல்விலை குறைக்கப்படும் எனக் கூறவில்லை. ஆனால், திமுக தேர்தல் அறிக்கையில், பெட்ரோல் ரூ.5-ம், டீசல்விலையில் ரூ.4-ம் குறைப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

இது வரையில் ரூ.3 மட்டுமே குறைத்துள்ளனர். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல திமுக அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை என்று தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...