தமிழகம் ஒருபோதும் புறக்கணிக்கப்பட வில்லை

பாஜக மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் கள்ளக்குறிச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணியில் எந்தமாற்றமும் இல்லை.

மழைவெள்ள பாதிப்பு குறித்து மத்தியக்குழு பார்வையிட்டு சென்றநிலையில், மழை பாதிப்புநிவாரணத் தொகை இதுவரைதமிழகத்துக்கு வழங்கப்படவில்லை என்று கூறுகின்றனர். பேரிடர் மேலாண்மை நிதி, பேரிடர் காலத்துக்கு முன்னரே மத்திய அரசு நிதி ஒதுக்கும். அந்த விஷயத்தை மாநில அரசுகள் கூறுவதில்லை.

பேரிடருக்குப் பிறகு மத்தியக்குழு ஆய்வு செய்து மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கை அளித்துள்ளது. அதனடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும். மேலும், தற்போது ஆளும் திமுக அரசானது பாதிக்கபட்ட விவசாய நிலங்கள் குறித்து முறையாக பதிவுசெய்திருந்தால் கண்டிப்பாக மத்திய அரசிடம் இருந்து நிதி வரப் பெற்றிருக்கும்.

நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழகத்துக்கு வலுசேர்க்கும் வகையில் திட்டங்கள் உருவாகும். ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு சிறப்பாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் தமிழகத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தமிழகம் ஒருபோதும் புறக்கணிக்கப்படவில்லை. கடந்த 7 ஆண்டுகளில் மத்திய பட்ஜெட்டில் ரூ.7.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சாலை மேம்பாட்டு பணிகளுக்காக மட்டும் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது.

பெட்ரோல் விலையில், மாநில அரசு வரிகளைக்குறைத்து, விலையைக் குறைக்க பாஜக போராட்டம் நடத்திவருகிறது. பாஜகவின் சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல்விலை குறைக்கப்படும் எனக் கூறவில்லை. ஆனால், திமுக தேர்தல் அறிக்கையில், பெட்ரோல் ரூ.5-ம், டீசல்விலையில் ரூ.4-ம் குறைப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

இது வரையில் ரூ.3 மட்டுமே குறைத்துள்ளனர். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல திமுக அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை என்று தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப ...

இந்தியா- சீனா எல்லை தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ளது இந்தியா - சீனா எல்லையில் ரோந்து செல்வது தொடர்பாக ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந ...

ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அளிக்க வேண்டும் – பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் ஐ.நா.,பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு, நிரந்தர இடம் அளிக்க வேண்டும் ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியா ...

இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம் 'பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன ...

இரட்டை வேடம் போடும் திருமாவளவன் – முருகன் சாடல் 'விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை வேடம் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங் ...

பிரதமர் மோடியை நெகிழ வைத்த பழங்குடியின பெண் ஒடிசாவில் பழங்குடியின பெண் ஒருவர், பிரதமர் மோடிக்கு நன்றி ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முட ...

மொழியை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது – L முருகன் பேட்டி ''மொழியை வைத்து மக்களை ஏமாற்றும் செயல் இனியும் எடுபடாது,'' ...

மருத்துவ செய்திகள்

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...