தமிழகம் ஒருபோதும் புறக்கணிக்கப்பட வில்லை

பாஜக மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் கள்ளக்குறிச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணியில் எந்தமாற்றமும் இல்லை.

மழைவெள்ள பாதிப்பு குறித்து மத்தியக்குழு பார்வையிட்டு சென்றநிலையில், மழை பாதிப்புநிவாரணத் தொகை இதுவரைதமிழகத்துக்கு வழங்கப்படவில்லை என்று கூறுகின்றனர். பேரிடர் மேலாண்மை நிதி, பேரிடர் காலத்துக்கு முன்னரே மத்திய அரசு நிதி ஒதுக்கும். அந்த விஷயத்தை மாநில அரசுகள் கூறுவதில்லை.

பேரிடருக்குப் பிறகு மத்தியக்குழு ஆய்வு செய்து மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கை அளித்துள்ளது. அதனடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும். மேலும், தற்போது ஆளும் திமுக அரசானது பாதிக்கபட்ட விவசாய நிலங்கள் குறித்து முறையாக பதிவுசெய்திருந்தால் கண்டிப்பாக மத்திய அரசிடம் இருந்து நிதி வரப் பெற்றிருக்கும்.

நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழகத்துக்கு வலுசேர்க்கும் வகையில் திட்டங்கள் உருவாகும். ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு சிறப்பாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் தமிழகத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தமிழகம் ஒருபோதும் புறக்கணிக்கப்படவில்லை. கடந்த 7 ஆண்டுகளில் மத்திய பட்ஜெட்டில் ரூ.7.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சாலை மேம்பாட்டு பணிகளுக்காக மட்டும் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது.

பெட்ரோல் விலையில், மாநில அரசு வரிகளைக்குறைத்து, விலையைக் குறைக்க பாஜக போராட்டம் நடத்திவருகிறது. பாஜகவின் சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல்விலை குறைக்கப்படும் எனக் கூறவில்லை. ஆனால், திமுக தேர்தல் அறிக்கையில், பெட்ரோல் ரூ.5-ம், டீசல்விலையில் ரூ.4-ம் குறைப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

இது வரையில் ரூ.3 மட்டுமே குறைத்துள்ளனர். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல திமுக அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை என்று தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்

உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...