குறைக்கப்படாத கலால் வரி மக்களுக்கு இழைக்கப் படும் அநீதி

தமிழகம், மே.வங்கம் உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதானவரி குறைக்க படவில்லை என பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

அனைத்து முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பெட்ரோல், டீசல்மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. ஆனால், தமிழகம், மேற்குவங்கம், தெலுங்கானா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வரி குறைக்கப் படவில்லை. இங்கு வரி அதிகமாக உள்ளது.

இது அங்குள்ள மக்களுக்கு இழைக்கப் படும் அநீதி. இதனால், அம்மாநில மக்கள் அவதியடைந்து வருகின்றனர். தேசியநலன் கருதி வரியை குறைக்கவேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

முன்னதாக, கோவிட் பரவல் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் நடந்தஆலோசனை கூட்டத்தின் போது பிரதமர் மோடி பேசிய தாவது: கோவிட் அச்சுறுத்தல் முழுமையாக நீங்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது. நாம் இன்னும் விழிப்புடன் செயல்பட வேண்டும். வயது வந்தோரில் 96 சதவீதம்பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டது, குறித்து ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னுரிமை அளித்துவருகிறோம்.

பொது இடங்களில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதை இன்னும் ஊக்கப்படுத்த வேண்டும். மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகளில் பணியாளர்கள் மற்றும் உள்கட்டமைப்பை அதிகப்படுத்துவது முக்கியம். மத்திய மாநில அரசுகளின் கூட்டுமுயற்சியால் மருத்துவ உள்கட்டமைப்பு மேம்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடியை சந்தித்து வாழ்த்து பெற் ...

மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இசைஞானி பிரதமர் நரேந்திரமோடியுடன் இசைஞானி இளையராஜா சந்திப்பு மேற்கொண்டார். இளையராஜாவின் ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த ம ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நடைபெற்ற நாட்டின் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்யாத செயல் – பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட டிரம்ப், தற்போது ...

வளர்ச்சியை நோக்கி இந்தியா – ஐ ...

வளர்ச்சியை  நோக்கி இந்தியா – ஐநா அறிக்கை நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் இந்தியா, சீனா ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்ட ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்டம் – பாஜக தலைவர் அண்ணாமலை கைது சென்னையில் டஸ்மாக் தலைமை அலுவலகத்தில், ரூ.1000 கோடி ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் ச ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் செயல்களுக்கு எதிராக போராடுவோம் – பிரதமர் மோடி 'பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக போராட ...

மருத்துவ செய்திகள்

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...