குறைக்கப்படாத கலால் வரி மக்களுக்கு இழைக்கப் படும் அநீதி

தமிழகம், மே.வங்கம் உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதானவரி குறைக்க படவில்லை என பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

அனைத்து முதல்வர்களுடனான ஆலோசனை கூட்டத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பெட்ரோல், டீசல்மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. ஆனால், தமிழகம், மேற்குவங்கம், தெலுங்கானா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் வரி குறைக்கப் படவில்லை. இங்கு வரி அதிகமாக உள்ளது.

இது அங்குள்ள மக்களுக்கு இழைக்கப் படும் அநீதி. இதனால், அம்மாநில மக்கள் அவதியடைந்து வருகின்றனர். தேசியநலன் கருதி வரியை குறைக்கவேண்டும். இவ்வாறு பிரதமர் பேசினார்.

முன்னதாக, கோவிட் பரவல் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் நடந்தஆலோசனை கூட்டத்தின் போது பிரதமர் மோடி பேசிய தாவது: கோவிட் அச்சுறுத்தல் முழுமையாக நீங்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது. நாம் இன்னும் விழிப்புடன் செயல்பட வேண்டும். வயது வந்தோரில் 96 சதவீதம்பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டது, குறித்து ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னுரிமை அளித்துவருகிறோம்.

பொது இடங்களில் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதை இன்னும் ஊக்கப்படுத்த வேண்டும். மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகளில் பணியாளர்கள் மற்றும் உள்கட்டமைப்பை அதிகப்படுத்துவது முக்கியம். மத்திய மாநில அரசுகளின் கூட்டுமுயற்சியால் மருத்துவ உள்கட்டமைப்பு மேம்பட்டுள்ளது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...