மேக் இன் இந்தியா திட்டம், இந்தியாவுக்கானது மட்டுமல்ல , அது உலகிற்கானது

பாதுகாப்புத்துறை கண்காட்சியை துவக்கிவைத்துள்ள பிரதமர் மோடி, மேக்இன் இந்தியாதிட்டம், இந்தியாவுக்கானது மட்டுமல்ல என்றும், அது உலகிற்கானது என பெருமிதம் தெரிவித்துள்ளார். 

உத்திர பிரதேசத்தின் லக்னோவில், 11ஆவது பாதுகாப்புத் துறை கண்காட்சி தொடங்கியுள்ளது. வருகிற 9ஆம் தேதிவரை நடைபெற உள்ள இந்த பாதுகாப்புக் கண்காட்சியை, பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார்.

பாதுகாப்புக் கண்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, மேக் இன் இந்தியா திட்டம், இந்தியாவுக்கானது மட்டுமல்ல , அது பன்னாட்டு சமூகத்திற்கானது என்றார். அடுத்த 5 ஆண்டுகளில், 25 வகையான ராணுவ தளவாடங்களை, AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் அடிப்படையில் தயாரிப்பதே, இந்திய அரசின் இலக்கு என  குறிப்பிட்டார்.

21ஆம் நூற்றாண்டு டிஜிட்டல் யூகத்திற்கான என்பதால், அதற்கேற்ற தொழில் நுட்பங்களை கொண்ட தளவாடங்கள் காலத்தின் கட்டாயம் என்றார்.. மேக் இன் இந்தியா திட்டத்தின்கீழ், கடந்த 5 ஆண்டுகளில், பீரங்கிகள் உள்ளிட்ட திறன் மிக்க ராணுவத் தளவாடங்கள் தயாரிக்க பட்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அடுத்த 5 ஆண்டுகளுக்குள், 35 ஆயிரம்கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடங்களை ஏற்றுமதிசெய்ய இலக்கு வைத்திருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். உள்நாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்கிடும் வகையில், 200 பாதுகாப்புத் தளவாட ஸ்டார்-அப் நிறுவனங்களை ஏற்படுத்திட இலக்கு வைத்திருப்பதாகவும், பிரதமர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்புக் கண்காட்சியை பார்வையிட்ட பிரதமர், ராணுவ வீரரின் சைகைக்கு ஏற்ப, கை-கால்களை அசைக்கும், இயங்கும் ரோபோவை கண்டு ரசித்து, அதனுடன் கைகுலுக்கினார்.

இதையடுத்து, துப்பாக்கிகள் காட்சிப் படுத்தப்பட்டிருந்த ஸ்டால்களை பார்வையிட்ட பிரதமர், இலக்கை காட்சிப்படுத்தி, எளிதாக குறிவைக்க உதவும், அதிநவீன இயந்திர துப்பாக்கியை இயக்கிபார்த்தார்.

“இந்தியா வளர்ந்துவரும் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையம்” என்ற தலைப்பில் நடைபெற்று வரும் லக்னோ பாதுகாப்பு கண்காட்சியில், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட 70 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 172 ராணுவத்தளவாட உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. டிஆர்டிஓ((DRDO)) உட்பட 856 இந்திய நிறுவனங்களும், தங்கள் ராணுவத் தளவாடங்களை காட்சிப்படுத்தி யிருக்கின்றன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...