இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை

கரோனா வைரஸ் பாதிப்பால் கேரளத்தில் சிகிச்சைபெற்று வந்த 3 மருத்துவ மாணவர்களுள் ஒருவர் குணமடைந்ததால் வீடுதிரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பாதிப்புக்கான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து ஆய்வுநடத்த பிரதமரின் வழிகாட்டுதலின் பேரில் உயர்நிலை அமைச்சர்கள் அடங்கிய இரண்டாவது கூட்டம் இன்று (வியாழக் கிழமை) நடைபெற்றது.

இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்,

“கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கேரள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 மருத்துவ மாணவர்களுள் ஒருவர் குணமடைந்ததால், அவர் வீடு திரும்பியுள்ளார். மற்ற இருவருக்கு மேற்கொள்ளப்பட்ட அடுத்தடுத்த பரிசோதனைகளில் வைரஸ் தன்மை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அவர் நல்ல உடல்நிலையில் உள்ளனர். இதிலிருந்து மீண்டு வருகின்றனர். அவர்கள் விரைவில் வீடு திரும்புவார்கள்.

இந்தியாவுக்கு வருகைதரும் 2,315 விமானங்களில் பயணித்த 2.51 லட்சம் பேர் கண்காணிக்கப் பட்டுள்ளனர். அதில் மூன்றுபேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 645 பேரும், இரண்டு முகாம்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இரண்டுவார காலத்துக்கு கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். அதன்பிறகு, கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்ட பிறகு, அவர்கள் வீடுதிரும்பலாம். பிப்ரவரி 11 வரை கிடைத்த முடிவுகளின்படி, அவர்கள் அனைவரும் நல்ல நிலையிலேயே உள்ளனர். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாகவே, அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்படவுள்ளனர்” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால ...

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது மோடி குற்றம்சாடியுள்ளார் 'டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது' என ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

மருத்துவ செய்திகள்

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...