இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை

கரோனா வைரஸ் பாதிப்பால் கேரளத்தில் சிகிச்சைபெற்று வந்த 3 மருத்துவ மாணவர்களுள் ஒருவர் குணமடைந்ததால் வீடுதிரும்பியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பாதிப்புக்கான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிலைமை குறித்து ஆய்வுநடத்த பிரதமரின் வழிகாட்டுதலின் பேரில் உயர்நிலை அமைச்சர்கள் அடங்கிய இரண்டாவது கூட்டம் இன்று (வியாழக் கிழமை) நடைபெற்றது.

இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்,

“கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கேரள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 மருத்துவ மாணவர்களுள் ஒருவர் குணமடைந்ததால், அவர் வீடு திரும்பியுள்ளார். மற்ற இருவருக்கு மேற்கொள்ளப்பட்ட அடுத்தடுத்த பரிசோதனைகளில் வைரஸ் தன்மை குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அவர் நல்ல உடல்நிலையில் உள்ளனர். இதிலிருந்து மீண்டு வருகின்றனர். அவர்கள் விரைவில் வீடு திரும்புவார்கள்.

இந்தியாவுக்கு வருகைதரும் 2,315 விமானங்களில் பயணித்த 2.51 லட்சம் பேர் கண்காணிக்கப் பட்டுள்ளனர். அதில் மூன்றுபேருக்கு மட்டுமே கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 645 பேரும், இரண்டு முகாம்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இரண்டுவார காலத்துக்கு கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். அதன்பிறகு, கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்ட பிறகு, அவர்கள் வீடுதிரும்பலாம். பிப்ரவரி 11 வரை கிடைத்த முடிவுகளின்படி, அவர்கள் அனைவரும் நல்ல நிலையிலேயே உள்ளனர். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாகவே, அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்படவுள்ளனர்” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...