சுற்றுச் சூழலுக்கு ஆபத்து ஏற்படாத பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதில் இந்தியா முக்கியபங்கை ஆற்றும் என பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
வன விலங்குகளின் பாதுகாப்பு குறித்த ஐ.நா. மாநாடு, குஜராத்மாநிலம் காந்தி நகரில் நடைபெற்றது. இதில் காணொலிகாட்சி மூலம் உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி கூறியதாவது:-
நாட்டின் வனப்பரப்பு 21 .67 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வனங்களின் எண்ணிக்கை 745 ல் இருந்து 870 ஆக உயர்ந்துள்ளது.
புலிகளின் எண்ணிக்கையை இருமடங்காக அதிகரிக்கும் இலக்கு எட்டப் பட்டுள்ளது. இமயமலையின் உயரமான சிகரங்களில் வசிக்கும் பனிச்சிறுத்தைகளை பாதுகாப்பதற்காக சிறப்புத்திட்டம் ஒன்று துவக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படா வகையில், 450 மெகாவாட் மறுசுழற்சி மின்உற்பத்தி செய்யப்பட்டு மின்வாகனங்கள், ஸ்மார்ட் சிட்டிகள், நீர்வள பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும்.சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படாத பசுமை பொருளாதாரத்தை வளர்ச்சியை முன்னெடுப்பதில் இந்தியா முக்கியபங்கை ஆற்றும்.
பாரீஸ் உடன்பாட்டின் அம்சங்களை அதிகம் அமல்படுத்தியுள்ள ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. முக்கிய கவனம்பெரும் உயிரின பாதுகாப்பு திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது எனக்கூறினார்.
இயற்கையுடன் நல்லிணிக்கமாக வாழவேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வகையில், இந்தமாநாட்டின் சின்னமாக தென்னிந்தியாவின் கோலம் அமைந்திருப்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் பிரதமர் மோடி உரையில் குறிப்பிட்டார்.
முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ... |
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை வளருதல் 5. கண்ணின் ... |