இந்தியா – யு.ஏ.இ., உறவு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.- ஜெய்சங்கர்

நிதி சார்ந்த தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உள்கட்டமைப்பு, ராணுவம் உள்ளிட்ட துறைகளில், இந்தியா – யு.ஏ.இ., உறவு புதிய உச்சத்தை தொட்டுள்ளதாக, நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
வளைகுடா நாடுகளில் ஒன்றான, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய் சென்றுள்ள நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சிம்பயாசிஸ் சர்வதேச நிகர்நிலை பல்கலையின் கிளையை துபாயில் துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

இந்தியா – யு.ஏ.இ., உறவு இன்றைக்கு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த, 2015ல் பிரதமர் மோடி யு.ஏ.இ., வந்தார். இந்த நுாற்றாண்டில் இந்திய பிரதமர் யு.ஏ.இ., வருவது இதுவே முதல்முறை. அந்த பயணத்தின் வாயிலாக, இருநாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவு வேகம் எடுத்தது.

உலகளாவிய பணியிடத்துக்கு இந்தியா இன்று தயாராக வேண்டும். அதே நேரத்தில், ‘சிப்’கள் தயாரிப்பு, மின்னணு வாகன போக்குவரத்து, சுத்தமான பசுமை தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விண்வெளி உள்ளிட்ட துறைகளிலும் சாதிக்க தயாராகி வருகிறது. இந்த சாத்தியக்கூறுகளின் வளர்ச்சியை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாகவும், சந்தைக்கு ஏற்றதாகவும் மாற்றுவதன் வாயிலாக நிர்வகிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாம் விழித்தால் கலப்படத்தை முழ ...

நாம் விழித்தால் கலப்படத்தை முழுமையாக நீக்கலாம் – அண்ணாமலை ''கலப்பட பொருள் இருந்தால், கடைக்காரரிடம் நாம் கேள்வி எழுப்ப ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோ ...

இந்தியாவில் விமான பயணம் செய்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ள ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயல ...

சீனா செல்கிறார் வெளியுறவு செயலர் மத்திய வெளியுறவு அமைச்சக செயலர் விக்ரம் மிஸ்ரி, வரும் ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க ...

குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்தோனேசியா அதிபர் இந்தியா வந்தார் டில்லியில் நடக்கும் நாட்டின் 76வது குடியரசு தின விழாவில் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண் ...

கொள்கை ரீதியான திட்டங்களை 10 ஆண்டுகளில் நிறைவேற்றிவிட்டோம் – அமித் ஷா ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் க ...

டங்ஸ்டன் ஏலம் ரத்து : மக்களின் கோரிக்கையை ஏற்றது மத்திய அரசு உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று, மதுரை அருகே அமைய ...

மருத்துவ செய்திகள்

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...