தி மு கவை தானே தாங்கள் ‘நாய்கள்’ என்று அழைத்திருக்க வேண்டும் ?

பார்ப்பனர்களை அண்டிபிழைத்த, மண்டியிட்டு பிழைத்த, ஆட்சி அதிகாரத்திற்காக பிரசாந்த் கிஷோர் என்ற பார்ப்பன நாயின் ஆலோசனையை எதிர் பார்த்து ஆட்சி எனும் எலும்பு துண்டுக்காக நாக்கை தொங்க போட்டுகொண்டு, பார்ப்பன அடிவருடிகளாக வாலை ஆட்டிக்கொண்டிருக்கும் திமுகவை தானே தாங்கள் ‘நாய்கள்’ என்று அழைத்திருக்க வேண்டும் ? நன்றியுள்ள வர்களாக இருந்திருக்க வேண்டும்? என்று திருப்பதி கேட்டுள்ளார்.

பார்ப்பனர்களை ‘நாய்கள்’ என்று பேசியிருக்கிறார் திமுக.,வின் அமைப்புசெயலாளர் ஆர் . எஸ்.பாரதி. அவரின் கவனத்திற்கு……. 1967ம் ஆண்டு, பதவி சுகத்திற்காக, ஆட்சி அதிகாரத் திற்க்காக ஈ.வெ.ராவை எதிர்த்து ராஜாஜி என்ற பார்ப்பனரை துணைக்கு அழைத்து கூட்டணி ஏற்படுத்தி கொண்டுதான் வெற்றிபெற முடிந்தது திமுக வால் என்பதை மறந்து விட வேண்டாம்.

 

1971ம் ஆண்டு ‘காஷ்மீரத்து பாப்பாத்தி’ என்று கருணாநிதியால் அழைக்கப்பட்ட இந்திரா காந்தி என்ற பார்ப்பனரோடு கூட்டணி அமைத்ததாலேயே கருணாநிதியின் தி மு க ஆட்சி அமைக்க முடிந்தது என்பதை மறந்துவிட்டதா திமுக? 1989 ம் ஆண்டு ஜெயலலிதா மற்றும் ஜானகி எம் ஜி ஆர் என்ற இருபார்ப்பன சமுதாய பெண்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலேயே, திமுக ஆட்சியை பிடிக்க முடிந்தது என்பதை மறுக்க முடியுமா?

1996 ம் ஆண்டு ‘சோ’ என்ற பார்ப்பனரின் முயற்சியால்தான் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடனும், ரஜினியின் அறைகூவலும் கிடைக்க பெற்று திமுக வெற்றிபெற்றது என்பதை மறைக்க முடியுமா? 2006 ம் ஆண்டு நான் ‘பூணூல் அணிந்த பார்ப்பனன்’ என்று தன்னை அழைத்துகொண்ட ராகுல் காந்தியின் காங்கிரஸ் கட்சியின் துணையோடு தான் தப்பித்தோம், பிழைத்தோம் என்ற ‘மைனாரிட்டி ‘ ஆட்சியை திமுகவால் பிடிக்கமுடிந்தது என்பதை மறுக்கவோ,மறைக்கவோ முடியுமா?

மேலும்,1999 ம் ஆண்டு வாஜ்பாய் என்ற பார்ப்பனரின் தலைமையில்தான் திமுக மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றது என்பதையும், 2004 மற்றும் 2009 ம் ஆண்டு காஷ்மீரத்து பாப்பாத்தி என்று கருணாநிதியால் அழைக்கபட்ட இந்திராவின் பேரன், பூணூல் அணிந்த பார்ப்பனர் என்று மார்தட்டிக் கொண்ட ராகுல் காந்தியின் பார்ப்பன காங்கிரஸ் கட்சியுடன் தலைமையில்தான் மத்தியில் ஆட்சி அதிகாரம் செலுத்தி 2ஜி வரலாறுபடைக்க முடிந்தது என்பதை மறந்து விட வேண்டாம்.

பதவிசுகம் பெறுவதற்கு, ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்கு துணையாய் இருந்த ‘பார்ப்பனர்களை’ நாய்கள் என்று அழைக்கிறீர்களே தி மு க அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி அவர்களே, பார்ப்பனர்களை அண்டிபிழைத்த, மண்டியிட்டு பிழைத்த, ஆட்சி அதிகாரத்திற்காக பிரசாந்த் கிஷோர் என்ற பார்ப்பன நாயின் ஆலோசனையை எதிர்பார்த்து ஆட்சி எனும் எலும்பு துண்டுக்காக நாக்கை தொங்கபோட்டு கொண்டு, பார்ப்பன அடிவருடிகளாக வாலை ஆட்டிக்கொண்டிருக்கும் தி மு கவை தானே தாங்கள் ‘நாய்கள்’ என்று அழைத்திருக்க வேண்டும் ? நன்றியுள்ளவர்களாக இருந்திருக்க வேண்டும்? தவறு செய்துவிட்டீர்கள் ஆர் எஸ் பாரதி அவர்களே, தவறு செய்து விட்டீர்கள்! என்று கூறியுள்ளார் நாராயணன் திருப்பதி.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...