இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவால் மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள சீனா, அதேசமயம் தொடர்ந்து 3-வது நாளாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவித்திருக்கிறது.

கடைசியில் கிடைத்த தகவலின்படி சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 981 ஆகவும், தொற்று எண்ணிக்கை 80 ஆயிரத்து 200 ஆகவும் உள்ளது.இந்தநிலையில், தென்கொரியாவில் இன்று மேலும் 142 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யபட்டு அதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 328 ஆகவும், மரணம் 32 ஆகவும் உயர்ந்துள்ளது.

இந்தியாவில் டெல்லி மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த தலா ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, அனைத்து மாநில சுகாதாரத் துறை செயலாளர்கள் மற்றும் தலைமைச் செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா காணொலி காட்சிமூலம் ஆலோசனை நடத்தினார். அதில், அனைத்து மாநிலங்களின் விமான நிலையங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் தங்கள்மாவட்டத்தில் ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடத்தி, மாவட்ட, தொகுதி மற்றும் கிராம மட்டங்களில் உள்ள குழுக்கள்மூலம் ஆய்வுசெய்ய வேண்டும் என்றும் ராஜீவ் கவுபா அறிவுறுத்தியுள்ளார்.இதேபோல, மாநிலங்களில் நோயாளிகளை தனிப்படுத்தி வைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று டெல்லி அரசின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகமாக இருப்பதாக சந்தேகத்தின் பேரில் , தயாராக இருக்க, டெல்லியில் உள்ள அனைத்து மருத்துவ மனைகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. நல்ல தரமான தனிமைப்படுத்தும் வார்டுகளை உருவாக்குமாறு கோரியுள்ளோம்.

இந்தியாவில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்காக சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 3 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர்

21 இத்தாலிய நாட்டினரில் 16 பேர் கொரோனா வைரஸ்பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் சாவ்லாவில் உள்ள இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் தனிமைப் படுத்தப்பட்ட நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ஆக்ராவில் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இனிமேல், நாங்கள் முன்னர் பட்டியலிட்ட 12 நாடுகளில் மட்டுமல்லாமல், இந்தியாவரும் அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈரான் அரசு எங்கள் முயற்சிகளை ஆதரித்தால், அங்கேயும் ஒருசோதனை ஆய்வகத்தை நிறுவவேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு உள்ளது. இது ஒரு முழுமையான சோதனைக்கு பிறகு ஈரானில் இருந்து எங்கள் குடிமக்களை திரும்ப அழைத்துவர உதவும் என கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்த� ...

ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்திற்கு எதிர்ப்பு; மம்தா மீது அமித் ஷா குற்றச்சாட்டு முஸ்லிம் ஓட்டு வங்கியை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக 'ஆபரேஷன் ...

மருத்துவ செய்திகள்

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...