இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவால் மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள சீனா, அதேசமயம் தொடர்ந்து 3-வது நாளாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவித்திருக்கிறது.

கடைசியில் கிடைத்த தகவலின்படி சீனாவில் கொரோனா பலி எண்ணிக்கை 2 ஆயிரத்து 981 ஆகவும், தொற்று எண்ணிக்கை 80 ஆயிரத்து 200 ஆகவும் உள்ளது.இந்தநிலையில், தென்கொரியாவில் இன்று மேலும் 142 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யபட்டு அதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 328 ஆகவும், மரணம் 32 ஆகவும் உயர்ந்துள்ளது.

இந்தியாவில் டெல்லி மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த தலா ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது நேற்று முன்தினம் உறுதி செய்யபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, அனைத்து மாநில சுகாதாரத் துறை செயலாளர்கள் மற்றும் தலைமைச் செயலாளர்களுடன் மத்திய அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா காணொலி காட்சிமூலம் ஆலோசனை நடத்தினார். அதில், அனைத்து மாநிலங்களின் விமான நிலையங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் தங்கள்மாவட்டத்தில் ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடத்தி, மாவட்ட, தொகுதி மற்றும் கிராம மட்டங்களில் உள்ள குழுக்கள்மூலம் ஆய்வுசெய்ய வேண்டும் என்றும் ராஜீவ் கவுபா அறிவுறுத்தியுள்ளார்.இதேபோல, மாநிலங்களில் நோயாளிகளை தனிப்படுத்தி வைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று டெல்லி அரசின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகமாக இருப்பதாக சந்தேகத்தின் பேரில் , தயாராக இருக்க, டெல்லியில் உள்ள அனைத்து மருத்துவ மனைகளுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. நல்ல தரமான தனிமைப்படுத்தும் வார்டுகளை உருவாக்குமாறு கோரியுள்ளோம்.

இந்தியாவில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புக்காக சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 3 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினர்

21 இத்தாலிய நாட்டினரில் 16 பேர் கொரோனா வைரஸ்பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் சாவ்லாவில் உள்ள இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் தனிமைப் படுத்தப்பட்ட நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ஆக்ராவில் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இனிமேல், நாங்கள் முன்னர் பட்டியலிட்ட 12 நாடுகளில் மட்டுமல்லாமல், இந்தியாவரும் அனைத்து வெளிநாட்டு பயணிகளையும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈரான் அரசு எங்கள் முயற்சிகளை ஆதரித்தால், அங்கேயும் ஒருசோதனை ஆய்வகத்தை நிறுவவேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு உள்ளது. இது ஒரு முழுமையான சோதனைக்கு பிறகு ஈரானில் இருந்து எங்கள் குடிமக்களை திரும்ப அழைத்துவர உதவும் என கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப் ...

140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்; சைப்ரஸ் நாட்டின் விருது பெற்ற மோடி பேச்சு இதை 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன் என சைப்ரஸ் ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்ச ...

கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்சையை உருவாக்கும் முதல்வர் முதல்வர் ஸ்டாலின் கற்பனை திறனை பலப்படுத்தி கொள்வதற்காக, தேவையில்லாத ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; ...

தேர்வு செய்த இடத்தில் தடுப்பணை; நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் கடந்த 2017ம் ஆண்டு, நாகப்பட்டினம் மாவட்டம், உத்தமசோழபுரத்தில் கடல்நீர் ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல ...

10 ஆண்டுகளில் தொழில்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள்; சைப்ரஸில் தொழிலதிபர்கள் மத்தியில் பிரதமர் பேச்சு கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்ட பொருளாதார மற்றும் ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – ...

இது போருக்கான சகாப்தம் அல்ல – பிரதமர் மோடி இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரத ...

போரின் நடுவே ரிஸ்க் எடுத்த பிரதமர்.. வரலாற்றில் இதுவே முதல் முறை மோடியை திரும்பி பார்த்த உலக நாடுகள் பிரதமர் நரேந்திர மோடி சைப்ரஸ், கனடா, குரோஷியா உள்ளிட்ட ...

மருத்துவ செய்திகள்

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...