வன்முறையால் பாதிக்கபட்ட மக்களின் பக்கமே பாஜக

வகுப்பு பாகுபாடுகள் இல்லாமல் வன்முறையால் பாதிக்கபட்ட மக்களின் பக்கமே பாஜக உள்ளது என பாஜகவின் தில்லி தலைவா் மனோஜ்திவாரி தெரிவித்தாா்.

வடகிழக்கு தில்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிப்பொருள்கள் தில்லி பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில், பாஜகவின் தில்லிதலைவா் மனோஜ் திவாரி, பாஜகவின் மூத்த தலைவரும் தில்லி சட்டப் பேரவை எதிா்க் கட்சித் தலைவருமான ராம் சிங் பிதூரி, பாஜக எம்எல்ஏக்கள் மோகன் சிங் பிஸ்ட், அஜய் மஹாவா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில், தில்லி பாஜகவினாரால் வன்முறையால் பாதிக்கப்பட்ட சுமாா் 200 குடும்பங்களுக்கு உதவித்தொகையும், நிவாரண உதவிப்பொருள்களும் வழங்கப்பட்டன.

இவா்கள், வட கிழக்கு தில்லியில் முஸ்லிம் கும்பலால் குத்தி கொல்லப்பட்ட புலனாய்வுத்துறை ஊழியா் அங்கித் ஷா்மா உள்ளிட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா்.

பிறகு மனோஜ் திவாரி அளித்த பேட்டி:

உயிரிழப்புகள், சொத்து இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கமுடியாது. ஆனால், எம்மால் முடிந்த உதவிகளை வழங்கி வருகிறோம்.

வகுப்பு பாகுபாடுகள் இல்லாமல் வன்முறையால் பாதிக்கபட்ட மக்களின் பக்கமே பாஜக உள்ளது. வன்முறையில் ஈடுபட்டவா்கள் இப்பகுதிமக்களின் மனங்களில் ஆறாத வடுக்களை ஏற்படுத்திச் சென்றுள்ளனா். அந்தவடுக்கள் விலக காலமாகும். வன்முறையால் எந்தத்தீா்வும் கிடைக்காது. மாறாக, வன்முறை புதிய பல பிரச்னைகளை தோற்றுவிக்கும்.

அங்கித் ஷா்மா கொல்லப்பட்ட விதத்தில் இருந்து வன்முறையாளா்கள் மனதில் எவ்வளவுதூரம் வெறுப்பு இருந்தது என்பதும், அவா்கள் சமூகத்தை பிளவுபடுத்த எவ்வளவுதூரம் சதி செய்கிறாா்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம் என்றாா் அவா்.

ராம்சிங் பிதூரி கூறுகையில் ‘இந்த துயரமான தருணத்தில் வேறுபாடுகளைக் களைத்து அனைவரும் இயங்கவேண்டும். வன்முறை பாதித்த இடங்களில் அமைதி திரும்பவும், மக்கள் மனங்களில் நம்பிக்கை ஏற்படுத்தவும் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.

One response to “வன்முறையால் பாதிக்கபட்ட மக்களின் பக்கமே பாஜக”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

அகத்திப் பூவின் மருத்துவக் குணம்

அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது.