ரிசர்வ் வங்கி அறிவிப்புகள் நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த பல்வேறு அறிவிப்புகளை இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது வெளியிட்டார். அதில், 2021-22 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், ரெப்போ வட்டிவிகிதம், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம், விவசாயிகளுக்கு கடன்குறித்த பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்புகள் நாட்டில் பணப் புழக்கத்தை பெரிதும் மேம்படுத்துவதோடு கடன் வழங்கலை ஊக்குவிக்கும். இதன் மூலமாக சிறுவணிக நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகள் பயன் பெறுவர். இது அனைத்து மாநிலங்களுக்கும் உதவும்’ என்று பதிவிட்டுள்ளார்.
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ... |