எதிரிகள் கால்வைப்பதற்கு முன்பாகவே வீழ்த்தப் படுகிறார்கள்

மும்பையில் கடற்படைவீரர்கள் 26 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது என்ற தகவல் வெளியாகி நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக நாம் தொடுத்திருப்பது, பல பத்தாண்டுகளில் நடைபெற்றிராத கண்ணுக்கு தெரியாத மிகப் பெரிய போர் ஆகும். நாம் ஒரு தேசமாக இதில் போர்க்காலம் போலவே செயல்படுகிறோம். சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புகளுடனும் ஒருங்கிணைந்து, மக்கள் ஆதரவுடன் செயல் படுகிறோம்.

கொரோனா வைரசுக்கு எதிரான போரில், பிரதமர் அலுவலகம், சுகாதார அமைச்சகம் மற்றும் தங்கள் சொந்த மருத்துவ அமைப்புகள் விடுத்துள்ள அறிவிக்கையை ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளும் கண்டிப்புடன் பின்பற்றி வருகின்றன.

கொரோனா வைரசுக்கு எதிரான இந்தபோர்தான் நாம் நம் வாழ்நாளில் சந்திக்கிற கண்ணுக்குத் தெரியாத மிகப்பெரிய போர். இது மனிதகுலத்துக்கு எதிரான போர் ஆகும். இது, நாட்டின் சுகாதாரம் மற்றும் பொருளாதார பாதுகாப்பில் பலத்தபாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிராக நாடுதொடுத்துள்ள போரில், பாதுகாப்பு படைகள் தகவல் தொடர்பிலும், வினியோக மேலாண்மையிலும், மருத்துவத்திலும் நிபுணத்துவத்துடன் உதவுகின்றன.

முன்னணி பாதுகாப்புத்துறை நிறுவனங்கள் முக கவசங்கள், பாதுகாப்பு உடைகள் மற்றும் உபகரணங்களை தயாரித்து அளிக்குமாறு கூறிஇருக்கிறோம். துருப்புகளின் நகர்வை ஆயுதப்படைகள் குறைத்துள்ளன. விடுமுறைகள் குறைக்கபட்டுள்ளன. வீடுகளில் வேலைசெய்ய ஊக்கப்படுத்தப்பட்டுள்ளது. இதெல்லாம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் உதவிகரமாக உள்ளன.

ராணுவத்தின் செயல்பாட்டு அம்சங்களை கொரோனா பரவல் பாதித்து இருக்கிறதா? என்றால், அவர்கள் எத்தகைய நெருக்கடிகளையும் எதிர் கொள்ள தயார் நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் அனைத்து சூழ்நிலைகளிலும் எதிரிகளிடம் இருந்து நாட்டின் இறையாண்மையை காப்பதற்கு தயாராக இருக்கிறார்கள்.

எதிரிகள்மீது புலனாய்வு அடிப்படையிலான நடவடிக்கைகள் மூலம் இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது. எந்தவொரு சூழ்நிலையையும் சந்திக்க நமது படைகள் தயார் நிலையில் இருக்கின்றன என்ற உறுதியை வழங்குகிறேன்.

கடந்த 2 வாரங்களாக காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுகோடு பகுதியில் நடந்து வந்துள்ள நடவடிக்கைகளை நீங்கள் பார்த்து வந்திருக்கிறீர்கள். உளவுத்துறை தகவல்கள் அடிப்படையிலான தாக்குதல்கள் மூலம், நாம் எதிரிகள்மீது ஆதிக்கம் செலுத்தி வருகிறோம். இந்திய மண்ணின்மீது எதிரிகள் கால்வைப்பதற்கு முன்பாகவே வீழ்த்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற் ...

எல்விஎம் 3 – எம் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது எல்விஎம் 3 - எம் 3 ராக்கெட் மூலம் ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 ...

விமான நிலையங்களின் எண்ணிக்கை 74 லிருந்து 140 ஆக உயர்வு தில்லி-தரம்சாலா-தில்லி இடையிலான முதலாவது இண்டிகோ விமானத்தை மத்திய தகவல் ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்த ...

பெண்சக்தி தான், வளர்ந்த பாரதத்திற்கான பிராணவாயு எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரலில் உங்களை மீண்டும் ...

கோவிட் விழிப்புடன் இருக்க வேண் ...

கோவிட் விழிப்புடன்  இருக்க வேண்டும் கோவிட்-19, இன்ஃப்ளூயன்சா தடுப்புக்கான பொதுசுகாதார தயார் நிலை ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு ர ...

பிரதமர் மோடி குறித்து அவதூறு  ராகுல் குற்றவாளி என தீர்ப்பு பிரதமர் மோடி குறித்து அவதூறாகபேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

மருத்துவ செய்திகள்

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...

இலந்தையின் மருத்துவ குணம்

ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...