ரிபப்ளிக் டிவி அர்னா கோஸ்வாமி உண்மையை அப்படியே புட்டு உடைப்பவர், வெளி நாட்டு நன்கொடைகளுக்கு ஆசைப்பட்டு போலி மதச்சார்பின்மை பேசும் பெரும்பாலான இந்திய ஊடகங்களின் மத்தியில் உண்மையை மட்டுமே பேசக்கூடிய ஒரு சில ஊடகங்களில் இவரது ஊடகமும் ஒன்று.
இந்த நிலையால் நேற்று ரிபப்ளிக் தொலைக்காட்சியில் நடந்த ஒருவிவாதத்தில் அர்னாப் கோஸ்வாமி, சோனியா காந்திமீது கடும் கண்டனங்களை வைத்தார். சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் மூன்று சாமியார்கள் காங்கிரஸ் நபர்களால் தாக்கப்பட்டது குறித்து சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி மௌனமாக இருக்கிறார்கள் என்றும், இதே வேறுமதத்தவர் தாக்கப்பட்டால் ’இத்தாலி சோனியா காந்தி’ உடனடியாக பேசியிருப்பார் என்றும் அவர் கூறினார். அர்னாப் கோஸ்வாமியின் இந்தபேச்சு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து உடனடியாக அவர் மன்னிப்புகேட்க வேண்டும் என காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் செய்தனர்.
இந்தநிலையில் நேற்று இரவு அர்னாப் கோஸ்வாமி தனது மும்பை அலுவலகத்தில் இருந்து காரில் தனதுமனைவியுடன் வீட்டுக்குச் சென்றுகொண்டு இருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் அவரதுகாரை வழிமறித்து அவரையும் அவரது மனைவியையும் தாக்கியதாக தெரிகிறது
இதனால் ஆத்திரமடைந்த அர்னாப் கோஸ்வாமி அந்த இருவரையும் கைதுசெய்ய வேண்டும் என்றும் அவர்கள் காங்கிரஸ் கைக் கூலிகள் என்றும் ஆவேசமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ... |
முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ... |