மனைவியுடன் காரில் சென்ற அர்னாப் மீது தாக்குதல்

ரிபப்ளிக் டிவி அர்னா கோஸ்வாமி உண்மையை அப்படியே புட்டு உடைப்பவர், வெளி நாட்டு நன்கொடைகளுக்கு  ஆசைப்பட்டு போலி மதச்சார்பின்மை பேசும் பெரும்பாலான இந்திய ஊடகங்களின் மத்தியில் உண்மையை மட்டுமே பேசக்கூடிய ஒரு சில ஊடகங்களில் இவரது ஊடகமும் ஒன்று.

இந்த நிலையால் நேற்று ரிபப்ளிக் தொலைக்காட்சியில் நடந்த ஒருவிவாதத்தில் அர்னாப் கோஸ்வாமி, சோனியா காந்திமீது கடும் கண்டனங்களை வைத்தார். சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் மூன்று சாமியார்கள் காங்கிரஸ் நபர்களால் தாக்கப்பட்டது குறித்து சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி மௌனமாக இருக்கிறார்கள் என்றும், இதே வேறுமதத்தவர் தாக்கப்பட்டால் ’இத்தாலி சோனியா காந்தி’ உடனடியாக பேசியிருப்பார் என்றும் அவர் கூறினார். அர்னாப் கோஸ்வாமியின் இந்தபேச்சு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து உடனடியாக அவர் மன்னிப்புகேட்க வேண்டும் என காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் செய்தனர்.

இந்தநிலையில் நேற்று இரவு அர்னாப் கோஸ்வாமி தனது மும்பை அலுவலகத்தில் இருந்து காரில் தனதுமனைவியுடன் வீட்டுக்குச் சென்றுகொண்டு இருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் அவரதுகாரை வழிமறித்து அவரையும் அவரது மனைவியையும் தாக்கியதாக தெரிகிறது

இதனால் ஆத்திரமடைந்த அர்னாப் கோஸ்வாமி அந்த இருவரையும் கைதுசெய்ய வேண்டும் என்றும் அவர்கள் காங்கிரஸ் கைக் கூலிகள் என்றும் ஆவேசமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.