கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மோடி முதல் இடம்

உலகம் முழுவதும் சுமார் 210 க்கும் அதிகமான நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மெல்லமெல்ல அதிகரித்து வருகிறது. அதில் குறிப்பாக அமெரிக்கா இத்தாலி ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் அதனுடைய கோரத்தாண்டவம் பார்க்கமுடிகிறது.

தொடர்ந்து மனிதகுலத்திற்கு பெரும் சவாலாக இருக்கக் கூடிய வைரசால் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்ற ஒருதருணத்தில் இந்தியாவிலும் தாக்கம் மெல்லமெல்ல அதிகரித்து வருகிறது. இருந்தபோதிலும் ஆரம்ப காலகட்டத்திலேயே ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதன்பிறகு ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த ஒரு     நிலையில் முழுவதும் கட்டுக்குள் கொண்டுவரப்படாததால் இரண்டாவது முறையாக 19 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மொத்தம் 40 நாட்கள் என வரும் மே 3ம் தேதிவரை ஊரடங்கு தொடரும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் கொரோனா பரவுதலை தடுக்க சிறப்பாக கையாளும் உலக தலைவர்கள் யார் யார் என்பது குறித்து மார்னிங் கன்சல்ட் என்ற சர்வதேச நிறுவனம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வின் படி தரவரிசைப் பட்டியலை தயார் செய்தது. அதில் 68 புள்ளிகளை பெற்று பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்திலும் அவருக்கு அடுத்தபடியாக மெக்சிகோ அதிபர் லோபஸ் ஓபரேட்டர் இரண்டாவது இடத்தையும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் 35 புள்ளிகள் பெற்று 3வது இடத்தையும் பிடித்தனர்.

இதில் உற்றுநோக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் உலகையே ஆட்டிப் படைக்கும் வல்லரசான அமெரிக்க அதிபரும், பிரதமர் மோடியின் நண்பருமான டிரம்ப் மைனஸ் 3 புள்ளிகளுடன் 8வது இடத்தை பிடித்தார். பிரான்ஸ் அதிபர் மெக்ரானுக்கு மைனஸ் 21 புள்ளிகள் பெற்று 9 ஆவது இடத்திலும், ஜப்பான் பிரதமர் ஷிங்கே அபேவுக்கு மைனஸ் 33 புள்ளிகளுடன் 10 ஆவது இடமும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் மேலும் அதிகரித்து, உலக அளவில் பெரும் தலைவராக உருவெடுத்து உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...