இந்தியா ‘உலகின் மருந்தகம்’

இன்று நடைபெற்ற  அணிசேரா நாடுகளின் மாநாட்டில் முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்கிறார். அணிசேரா இயக்கம் எந்தவொரு அதிகார மையத்தின் சார்பாகவோ எதிராகவோ அணிசேராத நாடுகளின் குழுமமாகும். 2011ம் ஆண்டு நிலவரப்படி, இதில் 120 நாடுகள் உறுப்பினர்களாகவும் 17 நாடுகள் பார்வையாளர் களாகவும் உள்ளனர்.

இந்தஇயக்கம் 1961-ம் ஆண்டு பெல்கிரேட்டில் உருவானது. யுகோசுலாவியாவின் அதிபராக இருந்த சோசப்பு பிரோசு டிட்டோ, இந்தியாவின் முதல்பிரதமர் ஜவஹர்லால் நேரு, எகிப்தின் இரண்டாவது தலைவர் ஜமால் அப்துல் நாசிர், கானாவின் முதல் தலைவர் குவாமே நிக்ரூமா மற்றும் இந்தோனேசியாவின் முதல்தலைவர் சுகர்ணோ இவர்களின் கருத்தாக்கத்தில் இந்த இயக்கம் துவங்கியது. இந்த ஐவருமே பனிப்போரில் ஈடுபட்டிருந்த மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய அதிகார மையங்களுக்கு இடையே நடுநிலையில் வளரும்நாடுகள் செல்லவேண்டும் என்ற கருத்துடையவர்களாக இருந்தனர்.

இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவிகேற்றப்பின், 2016-ம் வெனின்சுலாவில் நடந்த அணிசேரா நாடுகளின் பட்டியலில் கலந்துகொள்ளாமல் முதல்முறையாக தவிர்த்தார். தொடர்ந்து, 18-வது அணிசேரா நாடுகளின் மாநாடு கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்றது. இதிலும் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை. இந்தமாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிராக உள்ளதே மோடி இந்தமாநாட்டை தவிர்ப்பதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், அணிசேரா நாடுகளின் மாநாடு அஜர்பைசான் அதிபர் இல்ஹாம் அலிவேவ் தலைமை இன்று நடந்தது. வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்ற இந்த மாநாட்டில் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உலக நாடுகள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளதால், இந்த முறை மாநாட்டில் பங்கேற்றார்.

அதில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது;

  • மனிதநேயம் ஒருபெரிய நெருக்கடியை எதிர்கொள்கிறது; COVID-19 ஐ சமாளிக்க NAM பங்களிக்கவேண்டும்.
  • NAM உலகின் தார்மீகக் குரலாக இருந்துவருகிறது; அது அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்.
  • இந்தியா ‘உலகின் மருந்தகம்’ என்று கருதபடுகிறது; COVID-19 பாதிப்பை அடுத்து 120-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகளை அனுப்பியுள்ளோம். உலகம் COVID-19 உடன் போராடுகையில், சிலர் சமூகங்களையும் நாடுகளையும் பிளவு படுத்த பயங்கரவாதம், போலிசெய்திகள் மற்றும் மெய்நிகர் வீடியோக்கள் போன்ற வேறுசில கொடிய வைரஸ்களை பரப்புவதில் மும்முரமாக உள்ளனர்.
  • COVID-19 தற்போதுள்ள சர்வதேச அமைப்பின் வரம்பைக் காட்டுகிறது. COVID க்குப் பிந்தைய உலகில், நேர்மை, சமத்துவம் மற்றும் மனிதநேயத்தின் அடிப்படையில் உலக மயமாக்கலின் புதிய வார்ப்புரு நமக்குத்தேவை. இன்றைய உலகின் அதிக பிரதிநிதிகளான சர்வதேச நிறுவனங்கள் நமக்குத் தேவை என்றார்

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...