அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சாலை கட்டுமான பணிகளுக்கு 15 லட்சம்கோடி

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சாலை கட்டுமான பணிகளுக்கான 15 லட்சம்கோடி ரூபாய் செலவிட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 நோய்காரணமாக ஆட்டோமொபைல் துறை எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதுகுறித்து இந்துய வாகன உற்பத்தி சங்க உறுப்பினர்களுடன், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு, குறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, காணொலி மாநாட்டின் மூலம் இன்று உரையாடினார்.

இணையமைச்சர் வி.கே.சிங்; சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறைச் செயலாளர் கிரிதர்அரமனை மற்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் உடனிருந்தனர்.
இந்தக் கலந்துரையாடலின் போது கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் தொழில் துறை எதிர்கொள்ளும் பல சவால்கள் குறித்து உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். சில ஆலோசனைகளையும் வழங்கினர். இந்தத்துறை தொடர்ந்து செயலாற்ற அரசு ஆதரவளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

வர்த்தகம் என்பதில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது பொதுவானது என்றுகூறிய கட்கரி, தொழில்துறையினர் வர்த்தகத்தில் பணப் புழக்கத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தவேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தார்.

வளர்ச்சிக்காகப் பணியாற்றும் நேரத்தில், மோசமான காலங்கள் வரும்போது பாதுகாத்துக் கொள்வதற்காகவும் திட்டமிட வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார். உலக சந்தையில் போட்டியிடக்கூடிய அளவிற்கு திறமையை வளர்த்துக் கொள்ள புதுமை, தொழில்நுட்பம், ஆராய்ச்சித் திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும் என்று தொழில்துறையை அவர் கேட்டுக்கொண்டார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் 15 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சாலைக்
கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தாம் இலக்கு நிர்ணயித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

நடுவர் தீர்ப்பாயத்தில் உள்ள வழக்குகளை விரைந்துமுடிக்க தமது அமைச்சகம் அதிக நேரம் பணியாற்றுவதாக அவர் கூறினார்
பிரதிநிதிகளின் வினாக்களுக்கு பதிலளித்த கட்கரி, அரசு அவர்களுக்கு, இயன்ற அனைத்து உதவிகளையும் அளிக்கும் என உறுதியளித்தார். பிரச்சினைகள் குறித்து, அரசு மற்றும் இதர துறைகளில், அந்தந்த பிரச்சினைகளுக்குத் தொடர்பான நிலையில் உள்ளவர்களுடன் பேசுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...