அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சாலை கட்டுமான பணிகளுக்கு 15 லட்சம்கோடி

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சாலை கட்டுமான பணிகளுக்கான 15 லட்சம்கோடி ரூபாய் செலவிட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 நோய்காரணமாக ஆட்டோமொபைல் துறை எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதுகுறித்து இந்துய வாகன உற்பத்தி சங்க உறுப்பினர்களுடன், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு, குறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கான மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, காணொலி மாநாட்டின் மூலம் இன்று உரையாடினார்.

இணையமைச்சர் வி.கே.சிங்; சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறைச் செயலாளர் கிரிதர்அரமனை மற்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் உடனிருந்தனர்.
இந்தக் கலந்துரையாடலின் போது கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் தொழில் துறை எதிர்கொள்ளும் பல சவால்கள் குறித்து உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். சில ஆலோசனைகளையும் வழங்கினர். இந்தத்துறை தொடர்ந்து செயலாற்ற அரசு ஆதரவளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.

வர்த்தகம் என்பதில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவது பொதுவானது என்றுகூறிய கட்கரி, தொழில்துறையினர் வர்த்தகத்தில் பணப் புழக்கத்தை அதிகரிப்பதில் கவனம் செலுத்தவேண்டும் என்று ஆலோசனை தெரிவித்தார்.

வளர்ச்சிக்காகப் பணியாற்றும் நேரத்தில், மோசமான காலங்கள் வரும்போது பாதுகாத்துக் கொள்வதற்காகவும் திட்டமிட வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார். உலக சந்தையில் போட்டியிடக்கூடிய அளவிற்கு திறமையை வளர்த்துக் கொள்ள புதுமை, தொழில்நுட்பம், ஆராய்ச்சித் திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்தவேண்டும் என்று தொழில்துறையை அவர் கேட்டுக்கொண்டார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் 15 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சாலைக்
கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தாம் இலக்கு நிர்ணயித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

நடுவர் தீர்ப்பாயத்தில் உள்ள வழக்குகளை விரைந்துமுடிக்க தமது அமைச்சகம் அதிக நேரம் பணியாற்றுவதாக அவர் கூறினார்
பிரதிநிதிகளின் வினாக்களுக்கு பதிலளித்த கட்கரி, அரசு அவர்களுக்கு, இயன்ற அனைத்து உதவிகளையும் அளிக்கும் என உறுதியளித்தார். பிரச்சினைகள் குறித்து, அரசு மற்றும் இதர துறைகளில், அந்தந்த பிரச்சினைகளுக்குத் தொடர்பான நிலையில் உள்ளவர்களுடன் பேசுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...