நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அணுமின் உற்பத்திதிறன் 70 சதவீதம் அதிகரிக்கும் மத்திய அணுசக்தி துறை இணை அமைச்சர் கூறியுள்ளா

நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் அணுமின் உற்பத்தித்திறன் 70 சதவீதம் அதிகரிக்கும் என்று மத்திய   அணுசக்தித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். அணுசக்தித் துறையின் 100 நாள் செயல்திட்டத்தை ஆய்வு செய்வதற்காக நேற்று  (25.06.2024) புதுதில்லியில் நடைபெற்ற உயர்நிலைக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.

இக்கூட்டத்தில் அவர், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களை மதிப்பீடு செய்ததுடன் புதிய திட்டங்களுக்கான வழிகாட்டுதல்களை அமைச்சர் வழங்கினார்.

கூட்டத்தில் பேசிய அவர் உள்நாட்டு தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை அதிகரிப்பது குறித்து பேசிய அவர், அணுசக்திதொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறினார்.

கதிரியக்க மருந்துகள் மற்றும் அணுசக்தி மருத்துவம், ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். கதிரியக்க தொழில்நுட்பத்தின் வளர்ச்சி சாதாரண மக்களின் பொருளாதார மற்றும் சமூக நலனுக்கு வழிவகுக்கும் என்றும்   டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.

அணுசக்தி ஆணையத்தின் தலைவரும், அணுசக்தித் துறை செயலாளருமான டாக்டர் அஜித்குமார் மொகந்தி மற்றும் துறையின் மூத்த அதிகாரிகள் இந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மே ...

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மேற்கோண்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம் மேன்மை தங்கிய எனது சிறந்த நண்பரான அதிபர் லூலா ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்ல ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசு முறைப் பயணத்தின் ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்க ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்களும் ஒப்பந்தங்களும் இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: 1. சர்வதேச ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: லித்தியம் சுரங்கங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை அர்​ஜென்​டினா அதிபர் சேவியர் மிலேயை பிரதமர் மோடி நேற்று ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை விதிப்பதில் எந்த தயக்கமும் கூடாது” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்த்து போராட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் க ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் குரல் ஏன் முக்கியம்? பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு பிரேசிலில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற ...

மருத்துவ செய்திகள்

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...