பொதுகருத்து சுதந்திரம் திருமாவளவன்களுக்கு தானா?

விடுதலை சிறுத்தைகள் கட்சிநிறுவனர் திருமாவளவன் குறித்து ஒரு கார்ட்டூன் இரண்டு தினங்களுக்கு முன்பு வர்மா கார்ட்டூனிஸ்ட் வரைந்திருந்தார். அந்தகார்ட்டூன் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் வைரல் ஆனது. இதை பார்த்து கடுப்பான வசிக கார்ட்டூனிஸ்ட் வர்மாமீது வழக்கு பதிவு செய்தது.

இப்பொழுது கேள்வி என்னவென்றால்

இதற்கு முன்னாள் பாலாகார்ட்டூனிஸ்ட் என்பவர் தமிழக முதல்வரை நிர்வானமாக கார்ட்டூன் வரைந்தார். அதற்கு எந்த விதமான கடுமையான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சம்மந்தப்பட்ட திருமாவளவன் அவர்கள் ஹிந்துமத கடவுள்களை அசிங்கமாக பேசியுள்ளார் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, சிவன் கோவில்களை இடிப்பேன் தகர்ப்பேன் என்றுகூறினார் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை, டெல்லியில் இருந்துகொண்டு தென்மாவட்டங்களை தீப்பிடிக்க வைக்க முடியும் என்று பொது வெளியில் பேசினார் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை, அனைத்து சமுதாய ஆண்களுக்கும் ஆண்மை இல்லை எங்களிடம்தான் சரக்குமிடுக்கு உள்ளது என்று மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி ஜாதிய கலவரங்கள் தூண்டும்படி பேசினார் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இவ்வளவு வார்த்தைகளை பயன்படுத்தியவர் மீது ஏன் இன்னும் காவல்துறையும், அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை ?

திருமாவளவன் பேசிய அனைத்தையும் கார்ட்டூன்வரைந்தால் உடனடியாக பிசிஆர் (PCR) போட்டு அந்த நபரை கைது செய்கிறது காவல்துறை. ஏன் இந்தபாகுபாடு ? இது எந்தவகையில் நியாயம் ? கார்ட்டூன் என்பது ஒருகலை. யார் வேண்டுமானாலும் இங்கு கார்ட்டூன் வரையலாம், அனைவருக்கும் இங்கு கருத்துசுகந்திரம் இருக்கிறது பிறகு ஏன் காவல்துறை ஒருதலை பட்சமாக செயல்படுகிறது. கார்ட்டூனிஸ்ட் பாலா மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்க வில்லை ? ஆனால் கார்ட்டூனிஸ்ட் வர்மா-வை கைது செய்வதென்பது காவல் துறையும், அரசும் ஒருதலை பட்சமாக செயல் படுகிறதோ என்ற அச்சம் அனைவர்க்கும் எல தொடங்கியுள்ளது.

தாழ்த்தப்பட்ட சமூகம் என்ற பிம்பத்துக்கு பின்னல் ஒளிந்துகொண்டு கருத்துரிமையை சிதைக்கும் விசிகவினர். இதற்கு காவல் துறையும், அரசும் தெரிந்து தெரியாததை போல துணைபோவது ஜனநாயகத்தை அளிக்கும் செயல்.

யாரை வேண்டுமானாலும் இவர்கள் கார்ட்டூன் போடலாம் அசிங்கப் படுத்தலாம். அதை பார்த்து இங்கு உள்ள மற்ற சமூகத்தினர் வாய்பொத்தி நிற்க வேண்டுமென்ற ஆதிக்க திமிரை இவர்களுக்கு யார்கொடுத்தது ?

ஆனால் இவர்களுக்கு எதிர்வினை யாற்றினால் அவர்களை தொலை பேசி மூலம் தொடர்புகொண்டு மிரட்டுவது அல்லது பிசிஆர் (PCR) போட்டு ஒடுக்குவது போன்ற செயலில் ஈடுபட்டு ஒருபெரும்பான்மை சமூகத்தை இவர்கள் தொடர்ந்து அச்சபடுத்தி கொண்டு தான் வருகிறார்கள். பொதுகருத்து சுதந்திரம் தங்களை தவிர வேறுயாருக்கும் இல்லை என்ற ஆதிக்கதிமிர் மனிநிலைக்கு இவர்கள் வந்ததற்கான காரணம் என்ன ?

நன்றி கண்ணன் 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...