ரஷ்ய சீன உறவில் விரிசல்?

கொரோனா பரவல் உலகம் முழுக்க வேகம் எடுத்துள்ள நிலையில் தற்போது, சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட தொடங்கி உள்ளது.ரஷ்யாவில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் வேகமாக அதிகரிக்கதொடங்கி உள்ளது. முதலில் மெதுவாக உயர்ந்த கேஸ்கள் தற்போது வேகமாக தினமும் 10 ஆயிரம் என்ற வீதத்தில் பரவதொடங்கி உள்ளது. அங்கு 2,90,678 கொரோனா கேஸ்கள் உள்ளது.

உலகிலேயே கொரோனாவால் மிகமோசமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது பெரிய நாடாக ரஷ்யா மாறியுள்ளது. அங்கு 2722 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.

ஆனால் கொரோனாபரவல் தொடங்கிய சமயத்தில் சீனாவை உலகநாடுகள் எதிர்த்தது போல ரஷ்யா எதிர்க்கவில்லை. ரஷ்யா தொடர்ந்து சீனாவிற்கு தனது ஆதரவை அளித்துவந்தது. அதிலும் கொரோனா குறித்து ரஷ்யா எந்தபுகாரும் தெரிவிக்கவில்லை. அமெரிக்கா தொடர்ந்து கொரோனா பரவலுக்கு சீனா தான் காரணம் என்று கூறிவந்தது. ஆனால் ரஷ்யா அதை கவனத்தில் கொள்ளவில்லை. ரஷ்யா – சீனா உடனான நட்பு எப்போதும்போல இருந்தது.

அதேபோல் சீனாமீது வைக்கப்பட்ட புகார்களையும் ரஷ்யா எதிர்த்தது. கொரோனா வைரஸ் செயற்கையாக உருவானது என்றவாதத்தை ரஷ்யா ஏற்கவில்லை. அமெரிக்கா கஷ்டப்பட்டு உருவாக்கிய இந்தபுகாரை உலக நாடுகள் பல ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தியாவும் கூட ஏற்கும்நிலையில் உள்ளது . ஆனால் ரஷ்யா இதில் பெரிதாக கவனம் செலுத்த வில்லை . அதோடு சீனாவும் ரஷ்யாவிற்கு மருத்துவ ரீதியான உதவிகள் செய்துவந்தது. தனது மருத்துவ குழுவை சீனா ரஷ்யாவிற்கு அனுப்பியது.

நிலைமை இப்படிஇருக்க இரண்டு கம்யூனிஸ்ட் நாடுகளுக்கும் இடையே தற்போது பெரியவிரிசல் ஏற்பட்டுள்ளது. இரண்டு நாட்டின் உறவிலும் கொஞ்சம் கொஞ்சமாக விரிசல் ஏற்பட தொடங்கியுள்ளது. இதற்கு முதல்காரணம் சீனாதான். ரஷ்யா கடந்தமாதம் சீனா அருகே இருக்கும் தனது எல்லைகளை மூடியது. கொரோனா பரவலை தடுப்பதற்காக ரஷ்யா தனது எல்லையை மூடியது . இதை சீனா கடுமையாக கண்டித்த காரணத்தால் இரண்டுநாடுகளுக்கும் மோதல் ஏற்பட்டது.

சீனாவிற்கு அருகே இருக்கும் எல்லைகளை ரஷ்யா முடியதை ஏற்கமுடியாது. ரஷ்யா எங்களிடம் அறிவிக்காமல் எல்லையை முடியதை ஏற்கமுடியாது என்று சீனா கூறியது. இது சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வார்த்தை போராகமாறியது. அதன்பின் இரண்டாவதாக, ரஷ்யாவில் வேகமாக கொரோனா கேஸ்கள் அதிகரித்துவருகிறது. அங்கு 8 நாட்களில் 1 லட்சம் கேஸ்கள் வந்துள்ளது. உலகில் இரண்டாவது பெரியகொரோனா பாதிக்கப்பட்ட நாடாக ரஷ்யா மாறியுள்ளது.

இதனால் மக்கள் சீனாமீது கோபம் கொண்டனர். இப்படி அதிகரிக்கும் கேஸ்களாக சீனாவை கண்டிப்பாக எதிர்க்கவேண்டிய கட்டாயத்திற்கு ரஷ்யா சென்றுள்ளது. அதேபோல் ஊரடங்கு காரணமாக ரஷ்யாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. ஆனால் இன்னொரு பக்கம் சீனா தொடர்ந்து ஏற்றுமதியை செய்துவருகிறது. ரஷ்யாவிற்கு இது ஒருவகையில் கோபத்தை உண்டாக்கி உள்ளதால் சீனா மீது ரஷ்யா கோபத்தில் உள்ளது. அதேபோல் அந்நாட்டு அதிபர் புடினுக்கும் அரசியல் ரீதியான அழுத்தங்கள் உள்ளது.

கொரோனா வைரஸை சரியாக கட்டுப்படுத்த வில்லை, அதிபர் தலைமறைவாகி விட்டார் என்று புடின் மீது புகார் இருக்கிறது. இதனால் தனக்குவைக்கப்படும் அரசியல் ரீதியான அழுத்தத்திற்கு கொரோனா வைரஸ்தான் காரணம் என்று புடின் நினைக்கிறார். இதற்கு சீனாதான் காரணம் என்ற கோபத்தில் அவர்இருக்கிறார். இதுவும்கூட சீனா – ரஷ்யா இடையே சண்டை வர காரணம் ஆகும். அதேபோல் இன்னொரு பக்கம் ரஷ்யா – அமெரிக்கா இரண்டு நாடுகளும் ஒன்றாக சேர தொடங்கி உள்ளது.

ரஷ்யாவுடன் அமெரிக்கா ஒன்றாகசேர்ந்து பணியாற்றும் என்று இரண்டு நாடுகளும் உறுதிபூண்டு இருக்கிறது. இதற்காக இரண்டு நாடுகளும் அறிக்கை வெளியிட்டனர். பல வருட எதிரிகள் இப்போது ஒன்றாகி உள்ளனர். கொரோனாவை ஒன்றாக எதிர்ப்போம் என்று இரண்டுபேரும் கூறியுள்ளனர். இது சீனாவிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது. உலகளவில் சீனா தனக்கு நண்பன் இல்லாத நிலையை அடைந்துள்ளது.

அதிபர் டிரம்பும், அதிபர் புடினும் இதற்காக தொலைபேசி வழியாக பேசிக் கொண்டனர். இருவரும் நெருக்கம் ஆகியுள்ளனர். அமெரிக்காவுடன் ரஷ்யா நெருக்கம்காட்டுவது சீனாவுடனான அதன் உறவை முறிக்கதொடங்கி உள்ளது. பலவருடங்களாக நெருக்கமான நட்பு நாடுகளாக இருந்த ரஷ்யா – சீனா இடையே ஏற்பட்டுள்ள இந்தவிரிசல்.. இன்னும் பெரிதாகும் என்று கூறுகிறார்கள்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

வாழையின் மருத்துவக் குணம்

வாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி எடுத்து ஒரு ...