மோடியின் மேக் இன் இந்தியா சிறப்பு; மோடி பாராட்டு

இந்திய பிரதமர், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற ஒரு செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறார். இதன்மூலம் அவர் சரியான காரியத்தைச் செய்கிறார் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தெரிவித்தார்.

கிழக்கத்திய பொருளியல் கருத்தரங்கம் (இஇஎஃப்) என்ற ஒரு நிகழ்ச்சியில் அதிபர் புட்டின் பேசியதாவது.

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் கார்கள்பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அப்போது புட்டின் இந்தியப் பிரதமரைப் பாராட்டினார்.

ஒரு நாட்டில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் மோட்டார் வாகனங்கள் பயன் படுத்தப்பட வேண்டும்.பிரதமர் மோடி தலைமைத்துவத்தின் கீழ் பல கொள்கைகளை நடைமுறைப்படுத்தி இந்தியா இதற்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்டார்.

ரஷ்யாவில் முன்பு உள்நாட்டில் கார்கள் தயாரிக்கப்படவில்லை. ஆனால், இப்போது தயாரிக்கப்படுகின்றன.மெர்சிடிஸ் அல்லது ஆடி போன்ற கார்களை 1990களில் அதிக விலை கொடுத்து நாம்வாங்கினோம். ஆனால், இப்போது ரஷ்யா தயாரிக்கும் கார்கள் அந்தக்கார்களைவிட நவீனமாகத் திகழ்கின்றன.

இதில் ஒன்றும் புதுமை இல்லை. இதில் இந்தியா எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது. இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் மோட்டார் வாகனங்களை உள்நாட்டில் பயன்படுத்த இந்தியா இப்போது ஒரு மித்த கவனம் செலுத்தி வருகிறது.

இந்தியாவில் தயாரிப்போம் என்ற செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தி அதன்மூலம் நரேந்திர மோடி சரியான செயலைச் செய்து வருகிறார் என்று புட்டின் பாராட்டினார்.

ரஷ்யா சொந்தமாக கார்களை தயாரிக்கிறது. அவற்றை ரஷ்யா பயன்படுத்தவேண்டும். இதன்மூலம் உலகவர்த்தக நிறுவனத்துக்கான நம்முடைய கடப்பாடுகளை நாம் மீறிவிட்டதாகப் பொருள்படாது என்று அதிபர் புட்டினை மேற்கோள்காட்டி ரஷ்ய இணையத்தளத்தில் இடம்பெற்றிருந்த ஒருசெய்தி தெரிவித்தது.

ஐரோப்பிய ஒன்றியம், சவூதி அரேபியா, இந்தியா ஆகியவற்றுடன் சேர்ந்து புதிய ஒருபொருளியல் வழித்தடத்தை ஏற்படுத்த அமெரிக்கா மும்முரமாகக் களத்தில் குதித்து இருக்கிறது.

அத்தகைய ஓர் ஏற்பாடு ரஷ்யாவுக்கும் பலன்அளிக்கும் என்றும் அதன்மூலம் தளவாடப் போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் என்றும் பல ஆண்டுகளாகவே இத்தகைய ஒருதிட்டம் பற்றி விவாதிக்கப்பட்டு வருவதாகவும் புட்டின் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

என்எல்சி அதன் துணை நிறுவனங்களி ...

என்எல்சி அதன் துணை நிறுவனங்களில் ரூ.7,000 கோடி முதலீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்எல்சி) அதன் துணை ...

100 மாவட்டங்களில் பிரதமரின் தன-தா ...

100 மாவட்டங்களில் பிரதமரின் தன-தானிய வேளாண் திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (16.07.2025) ...

பகுதி நேர ஆசிரியர் போராட்டம்: ந ...

பகுதி நேர ஆசிரியர் போராட்டம்: நயினார் நாகேந்திரன் ஆதரவு 'தேர்தல் நேரத்தில், நேரில் சென்று ஆசிரியர்களுக்கு ஆதரவு அளிப்பதும், ...

காவிதான் தமிழை வளர்த்தது கருப் ...

காவிதான் தமிழை வளர்த்தது கருப்பு வளர்க்கவில்லை: தமிழிசை ''காவிதான் தமிழை வளர்த்தது. கருப்பு வளர்க்கவில்லை,'' என, ...

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்த ...

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தின் மையமாக கல்வி இருக்க வேண்டும் என்று அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார் நமது நாடு வளர்ச்சியடைந்து வரும் நிலையில், நமது முதன்மைக் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...