நாட்டின் பொருளாதாரம் பாதுகாப்பான கரங்களில் இருக்கிறது

பொருளாதாரம் பாதுகாப்பான கரங்களில் இருக்கிறது, கவலை படாதீர்கள் என்று ட்விட்டரில் ஏற்பட்ட கருத்துமோதலில் வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹாவுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் பதில் அளித்துள்ளார்.

எழுத்தாளரும், வரலாற்றாசிரியருமான ராமச்சந்திர குஹா நேற்று ட்விட்டரில் ஒருகருத்து பதிவிட்டிருந்தார். அந்த ட்விட்டரில் கடந்த 1939-ம் ஆண்டு பிரிட்டன் எழுத்தாளர் பிலிப்ஸ்பார்ட்டின் வார்த்தையைக் குறிப்பிட்டிருந்தார். அதில் “ குஜராத், பொருளாதார ரீதியாக முன்னேறியது, கலாச்சார ரீதியாக பின் தங்கிய மாநிலம். ஆனால், மேற்குவங்கம் கலாச்சார ரீதியான முன்னேறியது, பொருளாதார ரீதியாக பின் தங்கியது. இதை பிலிப் ஸ்பாார்ட் தெரிவித்துள்ளார் “ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலடியாக குஜராத் முதல்வர் விஜய்ரூபானி, ராமச்சந்தர குஹாவுக்கு பதில் அளித்தார். அதில் “ இந்தியாவை முன்பு ஆண்ட ஆங்கிலேயர்கள் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சிசெய்து நாட்டை ஆண்டார்கள். ஆனால் இப்போது உயர்ந்த குடிமக்கள் கொண்ட ஒரு குழுவினர் இந்திய மக்களை பிரிக்கப்பட வேண்டும் என விரும்புகிறார்கள்.

இந்த பிரித்தாளும் சூழ்ச்சியில் இந்தியர்கள் வீழ்ந்துவிட மாட்டார்கள். குஜராத்தும் சிறந்தது, மேற்குவங்கமும் சிறந்தது. எங்களுடைய கலாச்சார அடிப்படை கட்டமைப்பு வலுவானது, பொருளாதார அபிலாஷைகள் உயர்வானவை” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு ராமச்சந்திர குஹா தனது ட்விட்டரில் குஜராத் முதல்வருக்கு அளித்த பதிலில் “வரலாற்றில் இந்ததருணத்தில், வரலாற்றாசிரியரின் நகைச்சுவையான ட்வீட்களை மிகவும் ஆர்வமாக குஜராத் முதல்வர் பின்பற்றி யிருந்தால் இறந்த எழுத்தாளரை மேற்கோள் காட்டி வரலாற்றாசிரியரை எளிதில் குழப்பியிருக்கலாம். குஜராத் அரசு உண்மையில் பாதுகாப்பான கரங்களில் இருக்கவேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் ராமச்சந்திர குஹாவுக்கு பதில் அளித்தார். அதில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பரில் வெளியான ஒருகட்டுரையின் லிங்கை பதிவிட்டார். அதில் 2-வது உலகப்போரின் போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலந்து குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்த குஜராத்தின் ஜாம்நகர் மன்னர் மகராஜ் ஜாம்சாஹேப் திக்விஜய் சிங்ஜி ஜடேஜாவை போலந்து அரசு பாராட்டிய கட்டுரையையும் படத்தையும் பதிவிட்டிருந்தார்

நிர்மலா சீதாராமன் தனது ட்வி்ட்டில் “ கடந்த 1939-ம் ஆண்டு பிரிட்டன் எழுத்தாளர் பிலிப்ஸ்ப்ராட் குறிப்பிட்டது போல் குஜராத் மாநிலம் கலாச்சாரத்தில் பின் தங்கியிருந்தால், போலந்து நாட்டின் ஆயிரம் குழந்தைகளை ஜாம்நகர் மகராஜா காப்பாற்றியிருக்க மாட்டேரே” எனத் தெரிவி்த்திருந்தார்.

இதற்கு பதிலாக ராமச்சந்திர குஹா பதிவிட்டகருத்தில் “”குஜராத் முதல்வர் மட்டும்தான் எனது கருத்துக்களை கவனிக்கிறார், எனது கருத்துக்களால் கவலைப்படுகிறார் என்று நான் நினைத்தேன், ஆனால் இப்போது நிதியமைச்சர் கூட ஒரு வரலாற்றாசிரியரின் ட்வீட்களை பற்றி கவலை படுவதாகத் தெரிகிறது. பொருளாதாரம் நிச்சயமாக பாதுகாப்பான கரங்களில் இருக்கிறது” எனக் கிண்டலாகத் தெரிவித்தார்

இதற்கு நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கையில் “ நாட்டின் பொருளாதாரம் பாதுகாப்பான கரங்களில் இருக்கிறது, இது பற்றி குஹா கவலைப்பட வேண்டாம். நாட்டில் தற்போது நடந்து வரும் விவாதத்தை கருத்தில்கொண்டு பொறுப்புடன் எனது பணியைச் செய்கிறேன். அறிவார்ந்த உங்களைப் போன்றவர்கள் இதை அறிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...