அனைவரும் ஒன்றாக இணைந்து கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெறுவோம்

”அனைவரும் ஒன்றாக இணைந்து செயல் பட்டு, கொரோனாவுக்கு எதிரானபோரில் வெற்றிபெறுவோம்,” என, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

மத்தியில் இரண்டாவது முறையாக, பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்று, ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஓராண்டில் மத்தியஅரசு செய்துள்ள சாதனைகளை, மக்களிடம் கொண்டு செல்வதற்காக, தமிழக பா.ஜ., சார்பில், ‘காணொளி பேரணி’ நடத்தப்படுகிறது. தினமும் ஒருவர், சமூக வலைதளங்களில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியே உரையாற்று கின்றனர்.

நேற்று, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது: இந்தியா அமைதியான நாடு; அமைதிக்காக பாடுபடுகிற, அமைதியை விரும்புகிறநாடு. ஆனால், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவித்தால், அனுமதிக்க மாட்டோம்.நாட்டின் எல்லையை பாதுகாக்க, ஆயுதங்களை உபயோக படுத்த, ராணுவத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி ஆறுஆண்டுகளில், நாட்டின் வளர்ச்சிக்கு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். ஏழைமக்கள் மற்றும் நடுத்தர மக்கள், வாழ்க்கை தரம் மேம்பட நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது.ஐந்து ஆண்டுகளில், 11 கோடி கழிப்பறைகள், நாடுமுழுவதும், துாய்மைப் பாரதம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளன. ஆறு ஆண்டுகளில், ஏழைகளுக்கு, எட்டுகோடி காஸ் இணைப்பு உட்பட, 13 கோடி காஸ் இணைப்பு கொடுத்துள்ளோம்.

விறகில் சமைக்கும்போது, புகையில் சிரமப்பட்டனர். நுரையீரல் பாதிக்கப் பட்டது. தற்போது, கொரோனா பாதிப்பு காலத்தில், விறகில் சமைத் திருந்தால், பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பர்.புதிதாக, 38 கோடி வங்கி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. வயதுவந்தோர் அனைவரும், வங்கி கணக்கு துவக்கி உள்ளனர். இதனால், உடனடியாக விவசாயிகளுக்கு, அவர்கள் வங்கி கணக்கில், 2,000 ரூபாய் செலுத்த முடிகிறது.

‘ஆயுஸ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ், 15 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். சரியான நேரத்தில், ஊரடங்கை பல்வேறு கட்டங்களாக, பிரதமர் அறிவித்ததால், கொரானோ நோய் அதிகளவில் பரவுவதை, தடுக்க முடிந்தது. மேலும், ஊரடங்குகாலத்தில், தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முடிந்தது.

சென்னை, மும்பை போன்ற நகரங்களில், நோய்பாதிப்பு அதிகமாக உள்ளது. அரசு அறிவித்த விதிமுறைகளை பின்பற்றி, அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு, கொரோனாவுக்கு எதிரானபோரில் வெற்றி பெறுவோம் என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...