அனைவரும் ஒன்றாக இணைந்து கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றிபெறுவோம்

”அனைவரும் ஒன்றாக இணைந்து செயல் பட்டு, கொரோனாவுக்கு எதிரானபோரில் வெற்றிபெறுவோம்,” என, மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

மத்தியில் இரண்டாவது முறையாக, பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்று, ஓராண்டு நிறைவடைந்துள்ளது. ஓராண்டில் மத்தியஅரசு செய்துள்ள சாதனைகளை, மக்களிடம் கொண்டு செல்வதற்காக, தமிழக பா.ஜ., சார்பில், ‘காணொளி பேரணி’ நடத்தப்படுகிறது. தினமும் ஒருவர், சமூக வலைதளங்களில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வழியே உரையாற்று கின்றனர்.

நேற்று, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியதாவது: இந்தியா அமைதியான நாடு; அமைதிக்காக பாடுபடுகிற, அமைதியை விரும்புகிறநாடு. ஆனால், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவித்தால், அனுமதிக்க மாட்டோம்.நாட்டின் எல்லையை பாதுகாக்க, ஆயுதங்களை உபயோக படுத்த, ராணுவத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி ஆறுஆண்டுகளில், நாட்டின் வளர்ச்சிக்கு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். ஏழைமக்கள் மற்றும் நடுத்தர மக்கள், வாழ்க்கை தரம் மேம்பட நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது.ஐந்து ஆண்டுகளில், 11 கோடி கழிப்பறைகள், நாடுமுழுவதும், துாய்மைப் பாரதம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளன. ஆறு ஆண்டுகளில், ஏழைகளுக்கு, எட்டுகோடி காஸ் இணைப்பு உட்பட, 13 கோடி காஸ் இணைப்பு கொடுத்துள்ளோம்.

விறகில் சமைக்கும்போது, புகையில் சிரமப்பட்டனர். நுரையீரல் பாதிக்கப் பட்டது. தற்போது, கொரோனா பாதிப்பு காலத்தில், விறகில் சமைத் திருந்தால், பெரும் பாதிப்புக்குள்ளாகி இருப்பர்.புதிதாக, 38 கோடி வங்கி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. வயதுவந்தோர் அனைவரும், வங்கி கணக்கு துவக்கி உள்ளனர். இதனால், உடனடியாக விவசாயிகளுக்கு, அவர்கள் வங்கி கணக்கில், 2,000 ரூபாய் செலுத்த முடிகிறது.

‘ஆயுஸ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ், 15 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். சரியான நேரத்தில், ஊரடங்கை பல்வேறு கட்டங்களாக, பிரதமர் அறிவித்ததால், கொரானோ நோய் அதிகளவில் பரவுவதை, தடுக்க முடிந்தது. மேலும், ஊரடங்குகாலத்தில், தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முடிந்தது.

சென்னை, மும்பை போன்ற நகரங்களில், நோய்பாதிப்பு அதிகமாக உள்ளது. அரசு அறிவித்த விதிமுறைகளை பின்பற்றி, அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு, கொரோனாவுக்கு எதிரானபோரில் வெற்றி பெறுவோம் என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், ...

மே 29 – 30 சிக்கிம், மேற்கு வங்கம், பிகார், உ.பி., செல்லும் மோடி பிரதமர் நரேந்திர மோடி மே 29, 30 அகிய ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து வி� ...

பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டவர்களுக்கு ஆபரேஷன் சிந்தூர் சரியான பதிலடி – பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் சிக்கிம், மேற்கு ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலும� ...

“மாவோயிஸ்ட் வன்முறை முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை” – பிரதமர் மோடி மாவோயிஸ்ட் வன்முறை நாட்டிலிருந்து முற்றிலுமாக ஒழிக்கப்படும் நாள் வெகு ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான � ...

வளர்ச்சியடைந்த வேளாண் தீர்மான இயக்கத்தின் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலிக் காட்சி மூலம் ...

மருத்துவ செய்திகள்

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

ஆப்பிளின் மருத்துவக் குணம்

ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...