சீனாவை சம பலத்துடனே எதிர்கொள்கிறோம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில், முக்கியநாடுகளுடனான உறவு வலுவாகவும், சிறப்பாகவும் உள்ளது. சீனாவை, அரசியல் ரீதியாக, சரி சமமாகவே எதிர்கொள்கிறோம்’ என, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தொடர்ச்சியான தவறுகள், பொறுப்பின்மை ஆகியவற்றால், கடந்த ஆறுஆண்டுகளில், இந்திய வெளியுறவு கொள்கை, பொருளாதாரம், அண்டை நாடுகளுடனான நட்புறவு ஆகியவை, பெரிய அளவில் பாதிக்கப்பட்டு, நாடு பலவீன மடைந்துள்ளதாக, காங்., – எம்.பி., ராகுல் தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், தனது டுவிட்டர்’ பக்கத்தில், தொடர்ச்சியான பதிவுகளை, நேற்று வெளியிட்டார்.

அதன் விபரம்: இந்தியாவுடன் நல்லுறவு பாராட்டும், பலமுக்கிய நாடுகளுடனான நட்பு, மிக வலுவாகவும், உயர்வாகவும் உள்ளது.அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன், தொடர்மாநாடுகளும், தலைவர்களுடனான சந்திப்புகளும், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு, தொடர்ச்சியாக நடந்து வருகிறது. சீனாவை, அரசியல் ரீதியாக, சரிசமமாகவே இந்தியா எதிர்கொள்கிறது. இதுபற்றி, நிபுணர்களின் கருத்தை கேட்டாலே, உண்மை நிலவரம் புரியும்.

சீனா — பாக்., பொருளாதார பெருவழிசாலை, எல்லையில் சீனா அத்துமீறி சாலை அமைக்கும் முயற்சி, தென் சீன கடல் விவகாரம், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஐ.நா., தடை போன்றவற்றில், இந்தியா தன் நிலைப் பாட்டை, மிக வெளிப்படையாகவே பேசி வருகிறது.இலங்கை – சீனா இடையிலான அம்பன் தோட்டை துறைமுக ஒப்பந்தம், 2008ல் கையெழுத்தானது. அது பற்றி, நீங்கள் அப்போது கேள்வி எழுப்ப வேண்டியதுதானே. வங்கதேச உடனான எல்லை விவகாரம், 2015ல் முடிவுக்கு வந்தது. அது, பல வளர்ச்சிகளுக்கு வழி வகுத்தது.இவ்வாறு, அவர் பதிவிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...