தேசிய உணர்வுகளுக்கு எதிரான கட்சி திமுக

தேசிய உணர்வுகளுக்கு எதிராகவும் தேச வளர்ச்சியில் அக்கறையற்றவர்களின் புகலிடமாகவும் திமுக இருக்கிறது என பாஜக தேசியத்தலைவர் ஜே.பி. நட்டா விமர்சித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவராக எல். முருகன் நியமிக்கபட்ட பின்னர் கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்தசெயற்குழு நடைபெற்றது.

இதில் பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசியதாவது: தமிழகம் கோவில்கள் நிறைந்தபூமி. உயரிய பண்பாட்டை கொண்டது. தேசவிடுதலைக்கு பாடுபட்ட எண்ணற்ற சுதந்திர போராட்ட வீரர்களின் மண்இது. உலகம் முழுவதும் தொழில் முனைவோர்களாக தமிழர்கள் திகழ்கின்றனர். தமிழர்களின் உயரியபண்பாட்டுக்கு என் வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன். இனிவரும் காலங்களில் தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளிலும் சட்ட சபையில் பாரதிய ஜனதா கணிசமான இடங்களை கைப்பற்றும். நாம் நமது வாக்குவங்கியை அதிகரிக்க வேண்டும்.

கொரோனாகால லாக்டவுன் என்பது அரசியல் கட்சிகளுக்கும்கூட லாக்டவுன் என்பதாகிவிட்டது. இருந்தபோதும் மக்களுக்கு என்னதேவை என்பதை உணர்ந்து தமிழக பாஜக செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் சீரியதலைமையில் கொரோனாவை எதிர்த்து நாம் போராடி வருகிறோம்.

இந்த தேசத்தையும் 130 கோடி மக்களையும் கொரோனாவுக்கு எதிராக உரியநேரத்தில் முடிவெடுத்து தயார்படுத்தியவர் நமது பிரதமர் மோடி. கொரோனா தொடங்கும்போது அதற்கான மருத்துவமனைகள் எதுவும் இல்லை. இன்று 1500 கொரோனா சிறப்பு மருத்துவ மனைகள் உருவாக்க பட்டுள்ளன. 12.5 லட்சம் படுக்கைகள் இன்று தயாராக உள்ளன. இந்தியாவில் 50,000 வென்டிலேட்டர்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

நாடுவிடுதலை அடைந்தது முதல் முறையாக சுதந்திரமாக பிரதமர் மோடியின் தலைமையில் புதிய கல்விகொள்கை உருவாக்கபட்டுள்ளது. 1968, 1986-ம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட புதிய கல்வி கொள்கை என்பது வெறும் எண்களை மட்டுமே மாற்றியதாக இருந்தது. கொள்கை ரீதியாக எந்தமாற்றமும் கொண்டு வரவில்லை. தற்போதைய புதியகல்வி கொள்கையில் தாய்மொழி வழிக் கல்வியை உறுதி செய்திருக்கிறோம்.

தேசிய உணர்வுகளுக்கு எதிரான கட்சியாக இருக்கிறது திமுக. நாட்டின் வளர்ச்சியில் அக்கறை இல்லாதவர்களுக்கு புகலிடமாக இருக்கிறது திமுக. இத்தகைய சக்திகளுக்கு தகுந்தபாடம் கற்பிக்க வேண்டும். இவ்வாறு ஜேபி நட்டா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்த� ...

ஓட்டு வங்கிக்காக வக்ப் சட்டத்திற்கு எதிர்ப்பு; மம்தா மீது அமித் ஷா குற்றச்சாட்டு முஸ்லிம் ஓட்டு வங்கியை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக 'ஆபரேஷன் ...

மருத்துவ செய்திகள்

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...