பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்த தினம் செப்டம்பர் 17ம் தேதி கொண்டாடப்படுகிறது. மோடியின் பிறந்ததினத்தை கொண்டாடுவது தொடர்பாக சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் ஆலோசனைகூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பிறகு எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்கூறுகையில், “செப்டம்பர் 17-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழகம்முழுதும் மரம் நடும்விழா, அன்னதானம், கொடியேற்றம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்தநிகழ்ச்சிகள் அனைத்து மக்களையும் சென்றுசேரும் விதமாக சேவை வாரமாக கொண்டாட உள்ளோம்.
தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேர் பங்கேற்க உள்ள ஆன்மீக பேரணியையும் நடத்த உள்ளோம். நீட்விவகாரத்தில் திமுக மாணவர்களை பயமுறுத்துகிறது. மாணவர்களின் தற்கொலை வேதனை அளிக்கிறது. ஆனால், இதில் அரசியல்செய்வது அருவருக்கத்தக்கது செயல். அரசியல் லாபத்துக்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாணவர்களின் உயிரோடு விளையாடுகிறார். மாணவர்களின் உயிரோடு விளையாடுவதை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும். நீட் விவகாரத்தில் யாரும் அரசியல் செய்யகூடாது” என்று எல்.முருகன் தெரிவித்தார்.
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ... |
கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ... |