ஐநா ‘வசுதேவ குடும்பகத்தை’ பிரதிபலிக்கிறது

பொது சபையின் தலைவர் மேன்மைமிகு வோல்கன் போஸ்கிர் அவர்களே, மேன்மை மிகுந்த வர்களே, தாய்மார்களே, பெரியோர்களே, வணக்கம்!

எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்குமுன், போரின் பயங்கரங்களில் இருந்து ஒரு புதிய நம்பிக்கை எழுந்தது. மனிதகுல வரலாற்றில் முதல்முறையாக, ஒட்டுமொத்த உலகத்துக்கான ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. ஐக்கியநாடுகள் சாசனத்தின் நிறுவன கையொப்பமிட்ட நாடுகளில் ஒன்றான இந்தியா, அந்த நல்லநோக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அனைவரையும் ஒரு குடும்பமாக பார்க்கும் இந்தியாவின் சொந்த தத்துவமான ‘வசுதேவ குடும்பகத்தை’ அது பிரதிபலித்தது.

ஐக்கிய நாடுகளின் காரணமாக உலகம் தற்போது ஒருசிறந்த இடமாக இருக்கிறது. ஐக்கிய நாடுகளின் கொடியின் கீழ் அமைதிக்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட அனைவருக்கும் நாம் மரியாதை செலுத்துகிறோம். ஐநா அமைதி இயக்கங்களில் முன்னணி பங்களிப்பவராக இந்தியா இருந்துள்ளது.

ஆனால், நிறைய சாதிக்கப்பட்ட போதிலும், உண்மையான லட்சியம் இன்னும் நிறைவடைய வில்லை. மோதல்களைத் தடுப்பதிலும், வளர்ச்சியை உறுதி செய்வதிலும், பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதிலும், சமநிலை யின்மையை குறைப்பதிலும், டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதிலும் இந்தப்பணி இன்னும் செய்யப்பட வேண்டும் என்பதை இன்று நாம் இன்று நிறைவேற்றும் தொலைநோக்கு தீர்மானம் ஒப்புக்கொள்கிறது. ஐக்கிய நாடுகள் சபையையே சீர்திருத்த வேண்டிய தேவை இருப்பதை இந்தத் தீர்மானம் ஒப்புக்கொள்கிறது.

காலாவதியான அமைப்புகளின் மூலம் இன்றைய சவால்களை எதிர்த்து நம்மால் போரிடமுடியாது. விரிவான சீர்திருத்தங்கள் இல்லா விட்டால், நம்பிக்கையின்மை சிக்கலை ஐநா எதிர்கொள்ளும். இன்றைய இணைக்கப்பட்ட உலகத்துக்கு, இன்றைய உண்மைகளை பிரதிபலிக்கக் கூடிய; அனைத்து பங்குதாரர்களுக்காகவும் குரல் கொடுக்கக்கூடிய; புதிய சவால்களை எதிர்கொள்ள கூடிய; மற்றும் மனிதகுல நலனின் மீது கவனம் செலுத்தக்கூடிய சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை நமக்கு வேண்டும்.

இதை அடைவதற்காக அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணிபுரிய இந்தியா விரும்புகிறது.

ஐக்கிய நாடுகளின் பொது சபையில் பிரதமர் மோடியின் உரை

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...