ஐநா ‘வசுதேவ குடும்பகத்தை’ பிரதிபலிக்கிறது

பொது சபையின் தலைவர் மேன்மைமிகு வோல்கன் போஸ்கிர் அவர்களே, மேன்மை மிகுந்த வர்களே, தாய்மார்களே, பெரியோர்களே, வணக்கம்!

எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்குமுன், போரின் பயங்கரங்களில் இருந்து ஒரு புதிய நம்பிக்கை எழுந்தது. மனிதகுல வரலாற்றில் முதல்முறையாக, ஒட்டுமொத்த உலகத்துக்கான ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. ஐக்கியநாடுகள் சாசனத்தின் நிறுவன கையொப்பமிட்ட நாடுகளில் ஒன்றான இந்தியா, அந்த நல்லநோக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தது. அனைவரையும் ஒரு குடும்பமாக பார்க்கும் இந்தியாவின் சொந்த தத்துவமான ‘வசுதேவ குடும்பகத்தை’ அது பிரதிபலித்தது.

ஐக்கிய நாடுகளின் காரணமாக உலகம் தற்போது ஒருசிறந்த இடமாக இருக்கிறது. ஐக்கிய நாடுகளின் கொடியின் கீழ் அமைதிக்காகவும், வளர்ச்சிக்காகவும் பாடுபட்ட அனைவருக்கும் நாம் மரியாதை செலுத்துகிறோம். ஐநா அமைதி இயக்கங்களில் முன்னணி பங்களிப்பவராக இந்தியா இருந்துள்ளது.

ஆனால், நிறைய சாதிக்கப்பட்ட போதிலும், உண்மையான லட்சியம் இன்னும் நிறைவடைய வில்லை. மோதல்களைத் தடுப்பதிலும், வளர்ச்சியை உறுதி செய்வதிலும், பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதிலும், சமநிலை யின்மையை குறைப்பதிலும், டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதிலும் இந்தப்பணி இன்னும் செய்யப்பட வேண்டும் என்பதை இன்று நாம் இன்று நிறைவேற்றும் தொலைநோக்கு தீர்மானம் ஒப்புக்கொள்கிறது. ஐக்கிய நாடுகள் சபையையே சீர்திருத்த வேண்டிய தேவை இருப்பதை இந்தத் தீர்மானம் ஒப்புக்கொள்கிறது.

காலாவதியான அமைப்புகளின் மூலம் இன்றைய சவால்களை எதிர்த்து நம்மால் போரிடமுடியாது. விரிவான சீர்திருத்தங்கள் இல்லா விட்டால், நம்பிக்கையின்மை சிக்கலை ஐநா எதிர்கொள்ளும். இன்றைய இணைக்கப்பட்ட உலகத்துக்கு, இன்றைய உண்மைகளை பிரதிபலிக்கக் கூடிய; அனைத்து பங்குதாரர்களுக்காகவும் குரல் கொடுக்கக்கூடிய; புதிய சவால்களை எதிர்கொள்ள கூடிய; மற்றும் மனிதகுல நலனின் மீது கவனம் செலுத்தக்கூடிய சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை நமக்கு வேண்டும்.

இதை அடைவதற்காக அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணிபுரிய இந்தியா விரும்புகிறது.

ஐக்கிய நாடுகளின் பொது சபையில் பிரதமர் மோடியின் உரை

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...