தி.மு.க.வை தோற்கடிக்க எதிர் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரளவேண்டும் ; இல கணேசன்

வரவிருக்கும் சட்ட பேரவைத் தேர்தலில் தி.மு.க.வை தோற்கடிக்க எதிர் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரளவேண்டும் என பாரதிய ஜனதா தேசிய செயற்க்குழு உறுப்பினர் இல கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :

தி.மு.க ஆட்சியை வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணம் தமிழக மக்களிடையே உருவாகியுள்ளது . நெருக்கடிநிலைமை அமலில் இருந்தபோது கொள்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு இந்திராகாந்திக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டன. அதுபோன்று இப்போதும் நடந்தால் தான் தி.மு.கவை தோற்கடிக்க முடியும்.எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாததால் போக்குவரத்து தொழிலாளர் சங்க தேர்தலில் தி.மு.கவுக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது.

முதல்வர் கருணாநிதி சாதிப்பெயரை சொல்லி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தை திசை திருப்பு முயற்சியில் ஈடுபடுகிறார். வராலற்று ஆய்வாளர்களால் நிராகரிக்கப்பட்ட ஆரியம் – திராவிட சித்தாந்தத்தை கூறி மக்களை திசைதிருப்பும் முயற்சி இனி தமிழகத்தில் எடுபடாது.ஊழல் விவகாரதில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்க பட வேண்டும் என்பதற்காக நாடாளுமன்றத்தை பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் முடக்கி வருகின்றன.நாடாளுமன்ற கூட்டு குழுவால் மட்டுமே பிரதமர் உள்ளிட்ட செல்வாக்கு மிக்கவர்களை விசாரித்து உண்மையை வெளிக் கொண்டுவர முடியும். உண்மை வெளிவந்துவிடும் என்பதால்தான் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு உத்தரவிட காங்கிரஸ் தயக்கம் காட்டிவருகின்றது.

விரக்தியில் இருந்த நாட்டுமக்களுக்கு பிகார் தேர்தல் முடிவு நம்பிக்கையை தந்துள்ளது. இது 2014 மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என நம்பிக்கை உருவாகியுள்ளது .பிகார் மாநிலத்தில் தனித்து போட்டியிட்டதன் மூலம் காங்கிரஸ்கட்சியின் செல்வாக்கு தெரிய வந்தது. அதுபோல தமிழகத்திலும் அக்கட்சி தனித்து போட்டியிட வேண்டும். அப்போதுதான் தமிழகத்தில் காங்கிரஸின் செல்வாக்கு தெரிய வரும்.

சிறுபான்மையினருக்கு வழங்கப்படுவது போல இந்து மாணவர்களுக்கும் கல்விஉதவி தொகை வழங்க வலியுறுத்தி தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் பிரசாரயாத்திரை மேற்கொண்டுள்ளார். அதற்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.யாத்திரையின் நிறைவாக 2011 ஜனவரி 29ம் தேதி சென்னையில் மாபெரும்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். அதில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நிதின் கட்கரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர் என்றார் இல. கணேசன். பேட்டியின்போது பாரதிய ஜனதா மாநில துணை தலைவர்கள் டாக்டர். தமிழிசை சௌந்திரராஜன், திருமலைச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

புதினாவின் மருத்துவக் குணம்

இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...