பீகாரின் வளர்ச்சிக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி குடும்பம் ஒன்றிணைந்து செயல்படும்

பீகாரில் கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில், 243 இடங்களைகொண்ட சட்ட சபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்ததேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 10-ந் தேதி எண்ணப்பட்டன. இதில் மூத்த தலைவரும், முதல்மந்திரியுமான நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக. கூட்டணி, இளம்தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் மெகா கூட்டணியைவிட கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை தக்கவைத்தது.

இந்தநிலையில் பீகார் தலைநகர் பாட்னாவில் நிதீஷ்குமார் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் பாகு சவுகான் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம், நிதீஷ்குமார் தொடர்ச்சியாக 4-வது முறையாக பீகார் முதல்வராகியுள்ளார். பாஜகவைச் சேர்ந்த தர்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணுதேவி ஆகியோர் துணை முதல்வர்களாப் பதவியேற்றுக் கொண்டனர்.

இதையடுத்து, பீகாரின் முதல்வராக பதவியேற்ற நிதீஷ் குமாருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்துசெய்தியில்,

பீகார் முதல்வராக பதவியேற்ற நிதீஷ் குமார் மற்றும் அனைத்து அமைச்சர்களுக்கும் வாழ்த்துக்கள். பீகாரின் வளர்ச்சிக்காக தேசியஜனநாயகக் கூட்டணி குடும்பம் ஒன்றிணைந்து செயல்படும்.

மேலும் பீகார் வளர்சிக்காக மத்தியஅரசால் முடிந்த அனைத்து ஆதரவையும் வழங்க உறுதி அளிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

வாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர!

1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி வரத் தீரும். 2.நாக்குப் ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...