எரிவாயு சார்ந்த பொருளாதாரமாக மாறும் இந்தியா

மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகுஅமைச்சர் தர்மேந்திர பிரதான், கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் அமையவுள்ள லீஃபிநிட்டி பயோஎனெர்ஜியின் அழுத்தமூட்டப்பட்ட உயிரிஎரிவாயு ஆலைக்கு காணொலி மூலம் இன்று அடிக்கல் நாட்டினார்.

ரூ 42 கோடி செலவில் உருவாகவுள்ள இந்த ஆலை, ஒரு நாளைக்கு 200 டன் கரும்பாலைக் கழிவைப் பயன்படுத்தி, ஒருநாளைக்கு 10.2 டன் அழுத்தமூட்டப்பட்ட எரிவாயு மற்றும் உரத்தை உற்பத்தி செய்யும். பிரஜ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டிவிஓ இன்க் ஆகிய நிறுவனங்கள் இந்த ஆலைக்கான தொழில்நுட்பத்தை வழங்கியுள்ளன.

நிகழ்ச்சியில் பேசியஅமைச்சர், துடிப்பான உயிரி-எரிவாயுசூழலியலை உருவாக்குமாறு தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்தார். தூய்மையான மற்றும் நீடித்துநிற்கும் எரிசக்தியை வழங்க அரசு பணியாற்றி வருவதாக அவர் கூறினார்.

மாசுபடுத்தும் நாடாக இந்தியா இல்லாதபோதிலும், பொறுப்புள்ள உலகத் தலைவரான பிரதமர் நரேந்திர மோடி, நிலைத்தன்மை மற்றும் பருவநிலை மாறுதலை எதிர்கொள்வதற்கான இந்தியாவின் உறுதியை அடி கோடிட்டுள்ளதாக பிரதான் கூறினார்.

அழுத்தமூட்டப்பட்ட உயிரி எரிவாயு ஆலைகள் அனைத்து பங்குதாரர்களுக்கும் நன்மைஅளிக்கும் என்று அமைச்சர் கூறினார். இந்தஆலைகளுக்கு பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருவதாகவும் அவர் கூறினார்.

எரிவாயுசார்ந்த பொருளாதாரமாக இந்தியாவை மாற்றுவது குறித்து பேசிய பிரதான், சுமார் 900 அழுத்தமூட்டப்பட்ட உயிரி எரிவாயுஆலைகளை அமைப்பதற்காக முன்னனி நிறுவனங்களுடன் கடந்தவாரம் அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத் திட்டுள்ளதாக தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...