உலக விவசாய சந்தைகளில் இந்தியாவிற்கான இடத்தை நிலை நிறுத்த வேண்டிய நேரம் இது

பிரதமர் கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் அடுத்த தவணைக்கான தொகையை காணொலி மாநாடு மூலமாக பிரதமர்  நரேந்திர மோடி விடுவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; இன்று ஒரே ஒருபொத்தானை அழுத்தியதன் மூலம் நாட்டிலுள்ள ஒன்பதுகோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களின் வங்கிகணக்குகளுக்கு 18,000 கோடி ரூபாய் நேரடியாக செலுத்தபட்டுள்ளது. இந்தத்திட்டம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து இதுவரை ஒருஇலட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் உள்ள 70 இலட்சம் விவசாயிகள் இந்தவசதியை ஏற்கமுடியாதது  வருத்தம் தருகிறது. மேற்குவங்கத்தைச் சேர்ந்த 23 இலட்சம் விவசாயிகள் இந்த நிதி வசதி பெறுவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தும்  மாநில அரசு பரிசோதனை என்று சாக்குசொல்லி நிறுத்தி வைத்துவிட்டது . மேற்குவங்கத்தில் உள்ள விவசாயிகளின் நலன்கள் குறித்துப்பேசாத கட்சிகள், தில்லிக்கு வந்து விவசாயிகள் குறித்து பேசுகின்றனர். இந்தக் கட்சிகள் தற்போது வேளாண் விளைபொருள் விற்பனைக்குழு மண்டிகள் இல்லாதது குறித்துக் கவலைப்படுகிறார்கள். ஆனால் கேரள மாநிலத்தில் ஏபிஎம்சி மண்டிகள் இல்லை என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். இவர்கள் கேரளாவில் எந்தவிதப் போராட்டமும் நடத்துவதில்லை.

விவசாயிகளின் இடுபொருள்களுக்கான செலவினத்தைக் குறைக்கும் நோக்குடன் அரசு பணியாற்றுகிறது. விவசாயிகளின் இடுபொருள்களுக்கான செலவினங்களைக் குறைக்க உதவும்வகையில் மண்வள அட்டை, யூரியா மீது வேம்புப்பூச்சு, சூரியசக்திக் குழாய்கள் வழங்குதல் போன்ற பல்வேறு அரசுத்திட்டங்கள் செயல்படுத்த படுகிறது. . விவசாயிகளுக்கு மேலும் சிறந்தவகையிலான விவசாயக் காப்பீட்டு வசதி செய்து தரப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய அரசு முயன்று வருகிறது. இன்று கோடிக்கணக்கான விவசாயிகள் பிரதமர் பயிர்க் காப்பீட்டுதிட்டத்தின் மூலம் பயனடைந்து வருகிறார்கள்.

நாட்டில் உள்ள விவசாயிகளின் பயிர்களுக்கு நியாயவிலை கிடைப்பதை உறுதி செய்ய அரசு முயல்கிறது. நீண்டகாலமாக நிலுவையிலிருந்த சாமிநாதன் குழு அறிக்கையின் பரிந்துரையின்பேரில் விவசாயிகளுக்கு உற்பத்திச் செலவில் ஒன்றரை மடங்கு தொகையை குறைந்தபட்ச ஆதரவுவிலையாக அரசு நிர்ணயித்தது. குறைந்தபட்ச ஆதரவுவிலை நிர்ணயிக்கப்பட்ட பயிர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

விவசாயிகள் தங்களது பயிர்களை விற்பனை செய்வதற்காக புதிய சந்தைகளைத் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டிலுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய மண்டிகளை ஆன்லைன் மூலமாக அரசு இணைத்துள்ளது . இந்தமண்டிகளின் வாயிலாக ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

விவசாயிகள் தங்கள் பகுதிகளில் கூட்டுசக்தியாக செயலாற்றும் வகையில் சிறு விவசாயிகள் கொண்ட குழுக்களை அமைக்கும்பணியை அரசு மேற்கொண்டு வருகிறது . இன்று நாட்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் உற்பத்தி அமைப்புகள் (எஃப் பி ஓ) ஏற்படுத்துவதற்கான இயக்கம் நடந்துவருகிறது.

இன்று விவசாயிகளுக்கு நல்லவீடு, கழிவறை, குழாய்மூலம் வழங்கப்படும் சுத்தமான குடிநீர் ஆகியவை கிடைக்கின்றன. இலவச மின்இணைப்பு, இலவச சமையல் எரிவாயு இணைப்பு ஆகியவற்றின்மூலம் அவர்கள் பெருமளவு பயனடைந்திருக்கிறார்கள். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் ஐந்து இலட்ச ரூபாய் வரையிலான மருத்துவ சிகிச்சை இலவசமாக அளிக்கப்பட்டு வருவதால் விவசாயிகளுக்கு அவர்களின் வாழ்க்கைபற்றிய மிகப்பெரும் கவலை வெகுவாகக் குறைந்துள்ளது.

விவசாய சீர்திருத்தங்கள் மூலமாக விவசாயிகளுக்கு, முந்தைய நிலையில் இருந்ததைவிட பல்வேறு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டங்களின் காரணமாக விவசாயிகள் தாங்கள் விரும்பும் யாருக்கு வேண்டுமானாலும் தங்களின் விளைபொருள்களை விற்கலாம்; எங்கு அவர்களுக்கு சரியானவிலை கிடைக்கிறதோ அங்கு தங்கள் பொருள்களை அவர்கள் விற்றுக்கொள்ளலாம். இந்தப் புதிய சட்டங்கள் காரணமாக விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை குறைந்தபட்ச ஆதரவுவிலைக்கு விற்கலாம் அல்லது சந்தையில் விற்கலாம் அல்லது ஏற்றுமதிசெய்யலாம் அல்லது ஒரு வியாபாரியிடம் விற்கலாம் அல்லது மற்றொரு மாநிலத்தில் விற்கலாம் அல்லது எஃப் பி ஓ மூலமாக விற்கலாம் அல்லது பிஸ்கட்டுகள், சிப்ஸ், ஜாம் மற்றும் இதர நுகர்வோருக்கான மதிப்புக்  கூட்டப்பட்ட பண்டங்களின் ஒரு பகுதியாக அங்கம் வகிக்கலாம்.

மற்ற துறைகளில் முதலீடும், புதுமைகளும் அதிகரித்துள்ளன; அந்தந்தத் துறைகளில் இந்தியாவின் தனித்தன்மை நிலைபெற்றுவிட்டது; வருமானம் அதிகரித்துள்ளது . இதேஅளவு மரியாதையுடன் பெருமிதத்துடன் உலகின் விவசாயச் சந்தைகளில் இந்தியாவிற்கான தனியிடத்தை நிலை நிறுத்திக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.

விவசாய சீர்திருத்தங்களுக்கு முழு ஆதரவளித்து அவற்றுக்கு வரவேற்பளித்துள்ள நாட்டின்பல்வேறு இடங்களிலும் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நன்றி, விவசாயிகள் ஒருபோதும் கைவிடப்பட மாட்டார்கள்.

மக்கள், குறிப்பாக, கிராமப்புற பகுதிகளைச்சேர்ந்த மக்கள், சமீபத்தில் அஸ்ஸாம், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் பங்கேற்றனர்  தவறாக வழிநடத்தும் அனைத்து கட்சிகளையும் ஒருவிதத்தில் அவர்கள் நிராகரித்துள்ளனர் என்றும் பிரதமர் கூறினார்

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

வெங்காயத்தின் மருத்துவக் குணம்

ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...