இந்திய விஞ்ஞானிகளை கண்டு தேசம் பெருமை கொள்கிறது – பிரதமர் மோடி பெருமிதம்

உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசிதிட்டம் இந்தியாவில் விரைவில் தொடங்கப் படவுள்ளதாகப் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

கடந்த சிலநாட்களுக்கு முன் சீரம் மற்றும் பாரத்பயோடெக் நிறுவனங்களின் தடுப்பூசிகளின் அவசரக்கால பயன்பாட்டிற்கு அனுமதியளிக்கலாம் என்று இந்திய சிறப்பு நிபுணர் குழு பரிந்துரைத்தது.

இதை ஏற்று தலைமை மருந்துகட்டுப்பாட்டு அமைப்பு கோவிஷீல்ட்(சீரம்) மற்றும் கோவாக்சின் (பாரத் பயோடெக்) ஆகிய தடுப்பூசிகளுக்கு நேற்று அனுமதி அளித்து. இதையடுத்து இந்தியாவில் தடுப்பூசிவழங்கும் பணிகள் இன்னும் சில நாள்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தடுப்பூசி வழங்கும் ஒத்திகையும் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் நாடு முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்நிலையில், மக்களுக்குத் தடுப்பூசி அளிக்கும்பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற நேஷனல் மெட்ரோலஜி கான்க்ளேவ் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலிகாட்சி வாயிலாகக் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம் இந்தியாவில் விரைவில் தொடங்க உள்ளது.

இதற்காக, உழைத்த அனைத்து ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்களிப்பைக்கண்டு, ஒட்டுமொத்த தேசமும் பெருமிதம் கொள்கிறது.

மேட் இன் இந்தியா திட்டத்தில் தயாரிக்கப்படும் தயாரிப்புகளுக்கு உலகளாவிய தேவை இருப்பதை மட்டுமின்றி, அவை உலகளாவிய அங்கீகாரத்தை பெறுவதையும் நாம் உறுதிசெய்ய வேண்டும்.

எண்ணிக்கைகளை போலவே தரமும் முக்கியம். தற்சார்பு இந்தியா திட்டத்தில் நமதுபயணத்தில் எண்ணிக்கைகளோடு சேர்ந்து நமது தயாரிப்புகளின் தரமும் உயர வேண்டும்” என்றார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...