நீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ஏற்க வேண்டும்

மத்திய அரசின், பாலசக்தி புரஸ்கார் விருதுக்கு தேர்வாகியுள்ள குழந்தைகளுடன், பிரதமர் நரேந்திர மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நேற்று உரையாடினார்.

அப்போது, கொரோனா தொற்றுபரவல் தீவிரமாக இருந்த காலகட்டத்தில், அனைவரும் கைகழுவுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்ட குழந்தைகளை, அவர் வெகுவாக பாராட்டினார்.புதிய கண்டுபிடிப்புகள், சமூகசேவை, வீரதீர செயல்கள், கல்வி, விளையாட்டு, கலை, கலாசார துறைகளில் சாதனை புரிந்த குழந்தைகளுக்கு, பிரதமர் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் அமைப்பின் சார்பில், பால சக்தி புரஸ்கார் விருதுகளை, மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கிவருகிறது.

கடந்த ஆண்டுக்கான பாலசக்தி புரஸ்கார் விருதுக்கு, நாடு முழுவதிலும் இருந்து, 32 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன், பிரதமர் மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, நேற்று உரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது:

நாட்டின், 75வது சுதந்திரதினத்தை, நாம் விரைவில் கொண்டாட உள்ளோம். இந்தநேரத்தில், இந்த நாட்டுக்காக என்ன செய்யமுடியும் என்பதை, இளைய தலைமுறையினர் சிந்திக்கவேண்டும்.கொரோனா நெருக்கடி காலகட்டத்தில், இந்த விருதுகளை வென்றிருக்கும் நீங்கள், தனிச்சிறப்பு வாய்ந்தவர்களாக கருதப்படுகிறீர்கள்.துாய்மை இந்தியாதிட்டம் மற்றும் கொரோனா பரவல் காலகட்டத்தில், கைகழுவுவதன் அவசியம் குறித்த உங்கள் விழிப்புணர்வு பிரசாரங்கள், மக்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கியது.

நீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ஏற்க வேண்டும். முதலாவது, உங்கள் செயல்களில் வேகம் குறையாமல், எப்போதும் நிலையான தன்மையை பின்பற்றவேண்டும்.இரண்டாவது, இந்த நாட்டுக்காக நாம் உழைக்க வேண்டும். நம் அனைத்து பணிகளிலும், நாட்டின் நன்மை குறித்த அக்கறை இருக்கவேண்டும். அப்படியிருந்தால், நாம் செய்யும் பணிகள், பெரிய உயரத்தைதொடும்.

மூன்றாவது, எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றாலும், பணிவாக இருக்க பழகவேண்டும். இந்த குணம் இருந்தால், மற்றவர்களும் நம்முடன் சேர்ந்து, நம் வெற்றியை கொண்டாடுவர்.இவ்வாறு, பிரதமர் கூறினார்.

தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த, பிரசித்தி சிங், 7, என்ற சிறுமி, எட்டு அரசு பள்ளிகள் மற்றும் பல்வேறு பொதுஇடங்களில், 9,000க்கும் மேற்பட்ட, பழ மரங்களை நட்டுள்ளார். இதன்வாயிலாக, ஆயிரக்கணக்கான பறவைகள் மற்றும் உயிரினங்களுக்கு உணவு ஆதாரத்தை ஏற்படுத்தியுள்ளார். பிரசித்தி சிங்கின் இந்தமகத்தான பணியை அனைவரும் பின்பற்ற வேண்டும்.பிரதமர் நரேந்திர மோடி

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...