நீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ஏற்க வேண்டும்

மத்திய அரசின், பாலசக்தி புரஸ்கார் விருதுக்கு தேர்வாகியுள்ள குழந்தைகளுடன், பிரதமர் நரேந்திர மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நேற்று உரையாடினார்.

அப்போது, கொரோனா தொற்றுபரவல் தீவிரமாக இருந்த காலகட்டத்தில், அனைவரும் கைகழுவுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்ட குழந்தைகளை, அவர் வெகுவாக பாராட்டினார்.புதிய கண்டுபிடிப்புகள், சமூகசேவை, வீரதீர செயல்கள், கல்வி, விளையாட்டு, கலை, கலாசார துறைகளில் சாதனை புரிந்த குழந்தைகளுக்கு, பிரதமர் ராஷ்ட்ரிய பால புரஸ்கார் அமைப்பின் சார்பில், பால சக்தி புரஸ்கார் விருதுகளை, மத்திய அரசு ஆண்டுதோறும் வழங்கிவருகிறது.

கடந்த ஆண்டுக்கான பாலசக்தி புரஸ்கார் விருதுக்கு, நாடு முழுவதிலும் இருந்து, 32 குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன், பிரதமர் மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, நேற்று உரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது:

நாட்டின், 75வது சுதந்திரதினத்தை, நாம் விரைவில் கொண்டாட உள்ளோம். இந்தநேரத்தில், இந்த நாட்டுக்காக என்ன செய்யமுடியும் என்பதை, இளைய தலைமுறையினர் சிந்திக்கவேண்டும்.கொரோனா நெருக்கடி காலகட்டத்தில், இந்த விருதுகளை வென்றிருக்கும் நீங்கள், தனிச்சிறப்பு வாய்ந்தவர்களாக கருதப்படுகிறீர்கள்.துாய்மை இந்தியாதிட்டம் மற்றும் கொரோனா பரவல் காலகட்டத்தில், கைகழுவுவதன் அவசியம் குறித்த உங்கள் விழிப்புணர்வு பிரசாரங்கள், மக்கள் மத்தியில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கியது.

நீங்கள் அனைவரும் மூன்று உறுதிமொழியினை ஏற்க வேண்டும். முதலாவது, உங்கள் செயல்களில் வேகம் குறையாமல், எப்போதும் நிலையான தன்மையை பின்பற்றவேண்டும்.இரண்டாவது, இந்த நாட்டுக்காக நாம் உழைக்க வேண்டும். நம் அனைத்து பணிகளிலும், நாட்டின் நன்மை குறித்த அக்கறை இருக்கவேண்டும். அப்படியிருந்தால், நாம் செய்யும் பணிகள், பெரிய உயரத்தைதொடும்.

மூன்றாவது, எவ்வளவு பெரிய வெற்றியை பெற்றாலும், பணிவாக இருக்க பழகவேண்டும். இந்த குணம் இருந்தால், மற்றவர்களும் நம்முடன் சேர்ந்து, நம் வெற்றியை கொண்டாடுவர்.இவ்வாறு, பிரதமர் கூறினார்.

தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த, பிரசித்தி சிங், 7, என்ற சிறுமி, எட்டு அரசு பள்ளிகள் மற்றும் பல்வேறு பொதுஇடங்களில், 9,000க்கும் மேற்பட்ட, பழ மரங்களை நட்டுள்ளார். இதன்வாயிலாக, ஆயிரக்கணக்கான பறவைகள் மற்றும் உயிரினங்களுக்கு உணவு ஆதாரத்தை ஏற்படுத்தியுள்ளார். பிரசித்தி சிங்கின் இந்தமகத்தான பணியை அனைவரும் பின்பற்ற வேண்டும்.பிரதமர் நரேந்திர மோடி

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...