விளையாட்டுத் துறையை விளையாட்டு வீரர்களின் பார்வையில் அணுக துவங்கியுள்ளோம்

”விளையாட்டுத் துறையை தங்கள் வாழ்க்கையாக தேர்ந்தெடுக்க இளைய தலைமுறையினரை மத்தியஅரசு ஊக்குவித்து வருகிறது. எனவேதான், இத்துறைக்கான பட்ஜெட் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பா.ஜ.,வைச் சேர்ந்த லோக்சபா எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜ்யவர்தன்சிங் ரத்தோர், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் விளையாட்டு நிகழ்ச்சியை நேற்று நடத்தினார்.

அந்தநிகழ்ச்சியில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது:

நாட்டின் 75வது சுதந்திரதினத்தை நாம் கொண்டாடிவரும் வேளையில், நாடு புதிய வரையறை களையும், புதிய ஒழுங்கையும் உருவாக்கிவருகிறது.

விளையாட்டுத் துறையை அரசின் பார்வையில்இருந்து அணுகாமல், விளையாட்டு வீரர்களின் பார்வையில் அணுக துவங்கியுள்ளோம்.

பணம்இல்லை என்ற காரணத்துக்காக, திறமையான வீரர் வாய்ப்பை இழந்துவிடக்கூடாது என்பதில் இந்தஅரசு உறுதியாக உள்ளது. எனவேதான், சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் உதவித்தொகையை அரசு அளிக்கிறது.

விளையாட்டுத் துறைமீது நம் இளைய தலைமுறையினருக்கு உள்ள ஆர்வத்துக்கும், திறமைக்கும் குறைவில்லை.

கடந்த காலங்களில் போதிய நிதி ஒதுக்கி, ஆதரவுஅளிக்க அப்போதைய அரசுகள் தவறியதால்தான், பல தடைகளை அவர்கள் சந்தித்தனர். அதற்கு தற்போது தீர்வு காணப் பட்டுள்ளது.

விளையாட்டுத் துறையை தங்கள் வாழ்க்கையாக தேர்ந்தெடுக்க இளைய தலைமுறையினரை மத்தியஅரசு ஊக்குவித்து வருகிறது.

கடந்த 2014க்கு முன், விளையாட்டு துறைக்கு 800 – 850 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், இந்த பட்ஜெட்டில் 2,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, மூன்றுமடங்கு அதிகம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள � ...

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள பாஜக சொல்கிறார் ப . சிதம்பரம் இண்டி கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறிய முன்னாள் மத்திய ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்� ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச பாதுகாப்பில் விடவேண்டும்’ அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக, ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித� ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவ ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் வி� ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தொழில்நுட்ப ஆலோசனை சந்தரயான் -5 திட்டத்தின் கூட்டு முயற்சிகள் குறித்து, இஸ்ரோ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ� ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ்தான் முடிவு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில், ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பா� ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: ஜெய்சங்கர் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது, ...

மருத்துவ செய்திகள்

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...