விளையாட்டுத் துறையை விளையாட்டு வீரர்களின் பார்வையில் அணுக துவங்கியுள்ளோம்

”விளையாட்டுத் துறையை தங்கள் வாழ்க்கையாக தேர்ந்தெடுக்க இளைய தலைமுறையினரை மத்தியஅரசு ஊக்குவித்து வருகிறது. எனவேதான், இத்துறைக்கான பட்ஜெட் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பா.ஜ.,வைச் சேர்ந்த லோக்சபா எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜ்யவர்தன்சிங் ரத்தோர், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் விளையாட்டு நிகழ்ச்சியை நேற்று நடத்தினார்.

அந்தநிகழ்ச்சியில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது:

நாட்டின் 75வது சுதந்திரதினத்தை நாம் கொண்டாடிவரும் வேளையில், நாடு புதிய வரையறை களையும், புதிய ஒழுங்கையும் உருவாக்கிவருகிறது.

விளையாட்டுத் துறையை அரசின் பார்வையில்இருந்து அணுகாமல், விளையாட்டு வீரர்களின் பார்வையில் அணுக துவங்கியுள்ளோம்.

பணம்இல்லை என்ற காரணத்துக்காக, திறமையான வீரர் வாய்ப்பை இழந்துவிடக்கூடாது என்பதில் இந்தஅரசு உறுதியாக உள்ளது. எனவேதான், சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் உதவித்தொகையை அரசு அளிக்கிறது.

விளையாட்டுத் துறைமீது நம் இளைய தலைமுறையினருக்கு உள்ள ஆர்வத்துக்கும், திறமைக்கும் குறைவில்லை.

கடந்த காலங்களில் போதிய நிதி ஒதுக்கி, ஆதரவுஅளிக்க அப்போதைய அரசுகள் தவறியதால்தான், பல தடைகளை அவர்கள் சந்தித்தனர். அதற்கு தற்போது தீர்வு காணப் பட்டுள்ளது.

விளையாட்டுத் துறையை தங்கள் வாழ்க்கையாக தேர்ந்தெடுக்க இளைய தலைமுறையினரை மத்தியஅரசு ஊக்குவித்து வருகிறது.

கடந்த 2014க்கு முன், விளையாட்டு துறைக்கு 800 – 850 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், இந்த பட்ஜெட்டில் 2,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, மூன்றுமடங்கு அதிகம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...