அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதியான கூட்டணி என்று பாஜக. மாநில தலைவர் எல்.முருகன் கூறினார்.தொழில்அதிபர்கள் ஸ்ரீவித்யா, முத்துக்குமார், எழுத்தாளர் லதா ஆகியோர் நேற்று சென்னை கமலாலயத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் முன்னிலையில் தங்களை பா.ஜ.க.வில் இணைத்து கொண்டனர். அவர்களுக்கு பா.ஜ.க. தேசிய செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி, பொன்னாடை அணிவித்து உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
இதன்பின்பு பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-மதுரையில் 30-ந்தேதி பா.ஜ.க. தேசிய தலைவர் ஜேபி.நட்டா கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதன்பின்பு, 31-ந் தேதி அமைப்பு ரீதியாக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெறுகிறது. அ.தி.மு.க. கூட்டணி உறுதியான கூட்டணி.
இந்தகூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. தற்போதுவரை கூட்டணி தொடர்கிறது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் எப்போது வேண்டுமானாலும் பிளவு ஏற்படலாம் என்ற நிலை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |