ராணுவ தளவாட ஏற்றுமதி 9,000 கோடி ரூபாயாக உயர்வு

‘கடந்த ஐந்து ஆண்டுகளில், ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதிமதிப்பு, 9,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது,” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

கர்நாடகாவின் பெங்களூருவில் நடந்த, ‘ஏரோ இந்தியா – 2021’ கண்காட்சியில், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் பங்கேற்றகூட்டம் நடந்தது. இதில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது:ராணுவம் மற்றும் விண்வெளி துறைகளில், தன்னிறைவு பெறவும், புதியதொழில்நுட்பங்கள் மற்றும் புதுமைகளை புகுத்தும் நோக்கில், ‘ஐடெக்ஸ்’ என்ற திட்டம், 2018ல் துவக்கப்பட்டது.வேலை வாய்ப்புகள்இதில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர், தனிப்பட்ட சிந்தனையாளர்கள், ஆராய்ச்சிமேம்பாட்டு நிறுவனங்கள், மாணவர்கள் உட்பட பல்வேறு பிரிவினரும் தங்கள் பங்களிப்பை அளிக்கின்றனர்.

‛மத்திய அரசின் நிதியுதவி பெற்று துவங்கப்பட்ட, 384 ஸ்டார்ட்- அப் நிறுவனங்கள், 4,500 கோடி ரூபாய் முதலீடுகளை கொண்டுவந்துள்ளன. இவர்கள் வாயிலாக, 4.7 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.’ஐடெக்ஸ்’ திட்டத்தின் கீழ் துவக்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள், மிககுறைவாக உள்ளன. அதை, உயர்த்தி தர முயற்சிக்கும்படி, ராணுவ செயலரிடம் அறிவுறுத்தியுள்ளேன். நம் நாட்டு பொருளாதாரத்தில், இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மிக விரைவில் முக்கியபங்காற்ற உள்ளது என்றால், அது மிகையாகாது’.

‛இந்தியாவின் சுயாட்சி தன்மையை பராமரிப்பதில், ராணுவதளவாடங்கள் தயாரிப்பில், நாம் தற்சார்புடன் திகழ்வது முக்கியமானதாக கருதப்படுகிறது.ரூ. 203 கோடிவிண்வெளிதுறையில் மட்டும், ‘ஐடெக்ஸ்’ திட்டத்தின் கீழ், 300 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இணைந்துள்ளன. இதில், 10 நிறுவனங்களின், 100 கோடி ரூபாய் மதிப்பிலான தயாரிப்புகள், ஏரோ இந்தியா கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.ஏரோ இந்தியா கண்காட்சியில் பங்கேற்றுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில், 45 நிறுவனங்களுக்கு, 203 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளன.கடந்த, 2015- – 2020 வரையிலான ஐந்தாண்டுகளில், ராணுவ உபகரணங்கள் ஏற்றுமதி, 2,000 கோடி ரூபாயிலிருந்து, 9,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது’. இவ்வாறு, அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது  ...

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது – டிரம்ப் பெருமிதம் 'இந்தியாவுடன் தனக்கு நல்ல உறவு இருக்கிறது' என அமெரிக்க ...

வட மாநிலத்தவர் குறித்து அமைச்ச ...

வட  மாநிலத்தவர் குறித்து அமைச்சர் அன்பரசன் சர்ச்சை பேச்சு – அண்ணாமலை கண்டனம் '' வட மாநிலத்தவர்கள் பன்றி குட்டி போட்டது போன்று ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்த ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்திய அரசு நடவடிக்கை தடை செய்யப்பட்ட முகமைகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த சுங்கச்சாவடிகளின் தடையற்ற ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் ச ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி என்கவுண்டரில் ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங்கள் முடக்கம் ஆன்லைன் கேமிங்கின் அடிமையாக்கும் தன்மை மற்றும் நிதி இழப்பு ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழ ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழங்கப்படும் – நிதின் கட்கரி நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் துறைமுகங்களை இணைக்கும் தரைவழி ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா?

பெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் ...

அழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க

சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ...