ராணுவ தளவாட ஏற்றுமதி 9,000 கோடி ரூபாயாக உயர்வு

‘கடந்த ஐந்து ஆண்டுகளில், ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதிமதிப்பு, 9,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது,” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

கர்நாடகாவின் பெங்களூருவில் நடந்த, ‘ஏரோ இந்தியா – 2021’ கண்காட்சியில், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் பங்கேற்றகூட்டம் நடந்தது. இதில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது:ராணுவம் மற்றும் விண்வெளி துறைகளில், தன்னிறைவு பெறவும், புதியதொழில்நுட்பங்கள் மற்றும் புதுமைகளை புகுத்தும் நோக்கில், ‘ஐடெக்ஸ்’ என்ற திட்டம், 2018ல் துவக்கப்பட்டது.வேலை வாய்ப்புகள்இதில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோர், தனிப்பட்ட சிந்தனையாளர்கள், ஆராய்ச்சிமேம்பாட்டு நிறுவனங்கள், மாணவர்கள் உட்பட பல்வேறு பிரிவினரும் தங்கள் பங்களிப்பை அளிக்கின்றனர்.

‛மத்திய அரசின் நிதியுதவி பெற்று துவங்கப்பட்ட, 384 ஸ்டார்ட்- அப் நிறுவனங்கள், 4,500 கோடி ரூபாய் முதலீடுகளை கொண்டுவந்துள்ளன. இவர்கள் வாயிலாக, 4.7 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.’ஐடெக்ஸ்’ திட்டத்தின் கீழ் துவக்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள், மிககுறைவாக உள்ளன. அதை, உயர்த்தி தர முயற்சிக்கும்படி, ராணுவ செயலரிடம் அறிவுறுத்தியுள்ளேன். நம் நாட்டு பொருளாதாரத்தில், இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மிக விரைவில் முக்கியபங்காற்ற உள்ளது என்றால், அது மிகையாகாது’.

‛இந்தியாவின் சுயாட்சி தன்மையை பராமரிப்பதில், ராணுவதளவாடங்கள் தயாரிப்பில், நாம் தற்சார்புடன் திகழ்வது முக்கியமானதாக கருதப்படுகிறது.ரூ. 203 கோடிவிண்வெளிதுறையில் மட்டும், ‘ஐடெக்ஸ்’ திட்டத்தின் கீழ், 300 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இணைந்துள்ளன. இதில், 10 நிறுவனங்களின், 100 கோடி ரூபாய் மதிப்பிலான தயாரிப்புகள், ஏரோ இந்தியா கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.ஏரோ இந்தியா கண்காட்சியில் பங்கேற்றுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில், 45 நிறுவனங்களுக்கு, 203 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளன.கடந்த, 2015- – 2020 வரையிலான ஐந்தாண்டுகளில், ராணுவ உபகரணங்கள் ஏற்றுமதி, 2,000 கோடி ரூபாயிலிருந்து, 9,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது’. இவ்வாறு, அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

கொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்

மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ...

ஓமவல்லியின் மருத்துவக் குணம்

வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது.