வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசபக்தர்கள் வெல்லவேண்டும்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசபக்தர்கள் வெல்லவேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

1998 பிப்ரவரி 14-ம்தேதி கோவையில் நடைபெற்ற தொடர்குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலிசெலுத்தும் நிகழ்ச்சி ஆர்.எஸ்.புரத்தில் நேற்றுநடைபெற்றது. இதில், பாஜக, இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு, அஞ்சலி செலுத்தினர்.

இந்தநிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் பேசியதாவது: இந்து, தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக திமுக,கம்யூனிஸ்ட்கள் செயல்படுகின்றன. பிரதமரையும், இந்து கடவுள்களையும் கொச்சைப்படுத்துபவர்கள் மீது புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீட்தேர்வு கொண்டுவரப்பட்டது திமுக-காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான். ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கமும் அவர்கள் ஆட்சியில்தான் நடைபெற்றது. காங்கிரஸ் ஆட்சியில் இலங்கைத்தமிழர்கள் கொல்லப்பட்டபோது வேடிக்கைபார்த்தது திமுக. எனவே, திமுக, திக-வின் பொய் பிரச்சாரங்களை முறியடிக்கவேண்டும்.

வெற்றிவேல் யாத்திரைக்குக் கிடைத்தஆதரவு, ஸ்டாலினை வேல் ஏந்த வைத்திருக்கிறது. எனவே, தேர்தலுக்காக வேஷம் போட்டுள்ளவர்களின் போலிமுகத்தை மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தேர்தல் தேசபக்தர்களுக்கும், தேச விரோதிகளுக்கும் இடையேயான தேர்தல். இதில் தேசபக்தர்கள் வெல்லவேண்டும். இவ்வாறு அவர்பேசினார்.

இந்தநிகழ்ச்சியில், பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, கேரள இந்து ஐக்கியவேதி மாநிலத் தலைவர் கே.பி.சசிகலா டீச்சர், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணி, பாஜக மாவட்டத் தலைவர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல, குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு பேரூர்நொய்யல் ஆற்றங்கரையில் விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் அமைப்புகள் சார்பில் திதி கொடுத்து, அஞ்சலி செலுத்தப்பட்டது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...