பிரமாண்டமான பாஜக இளைஞர் அணி மாநாடு

நாளை(பிப்.21) நடைபெறவுள்ள பாஜக மாநிலமாநாட்டில் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்க உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தபட்டுள்ளது.

தமிழக பாஜகவின் இளைஞரணி மாநிலமாநாடு சேலம் அருகே உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நாளை நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனி விமானம் மூலம் சேலம் வருகிறார்.

மத்திய அமைச்சரின் வருகையையொட்டி சேலத்தில் போலீஸ்பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தநிலையில் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவருகின்றன. சட்டமன்றப் பேரவையின் கட்டிடவடிவில் பிரம்மாண்டமேடை அமைக்கப்பட்டுள்ளது. திறந்தவெளியில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் தமிழக பாஜக தலைவர் முருகன், இளைஞரணி தலைவர் வினோஜ் மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதற்காக சுமார் 60 ஏக்கர்பரப்பளவில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, 20 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்ய பட்டுள்ளது. மேலும் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கை வரவேற்க மாநாடு திடலின் இருபுறமும் பிரமாண்டபேனர்கள் வைக்கப்பட்டுள்ளதோடு சாலையோரங்களில் கட்சி கொடிகளும் வைக்கப்பட்டுள்ளன.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...