யோகி ஆட்சிக்காலத்தில் ஒரு விவசாயி கூட தற்கொலை செய்துகொள்ளவில்லை என்று உத்தரப் பிரதேசத்தைச்சேர்ந்த பாஜக அமைச்சர் மகேந்திர சிங் தேரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் தற்போது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று (பிப்ரவரி 24-ம் தேதி) நடைபெற்றகூட்டத்தில் அம்மாநிலக் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் எம்எல்ஏவுமான அஜய் குமார்லல்லு கலந்துகொண்டார்.
கேள்வி நேரத்தின் போது பேசிய அவர், ”பந்தேல்கண்ட் பகுதியில் நீர்ப்பாசன வசதிகள் சரியாக இல்லாததால் விவசாயிகளின் தற்கொலை அதிகளவில் உள்ளது. ஏன், நேற்றுகூட ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்” என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த ஜல் சக்தி அமைச்சர் மகேந்திரசிங், ”தலைவர்கள் என்று அழைக்கப்படும் நீங்கள்தான் ஏராளமான பொய்களைச் சொல்கிறீர்கள். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் அதிகபட்சத் தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. யோகி ஆதித்யநாத் ஆட்சிக் காலத்தில் ஒரு விவசாயி கூடத் தற்கொலை செய்துகொள்ளவில்லை” என்று தெரிவித்தார்.
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |