ஸ்டாலின் தெரிவித்ததிட்டங்கள் ஏற்கனவே மக்கள் நீதிமய்யம் வெளியிட்டவை

திருச்சியில் நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் தெரிவித்ததிட்டங்கள் ஏற்கனவே மக்கள் நீதிமய்யம் வெளியிட்டவை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தி.மு.க சார்பில் திருச்சியில் மாபெரும்பொதுக்கூட்டம் நடைபெற்றது. சட்ட பேரவை தேர்தலுக்கு தயார்படுத்திக் கொள்ள கூட்டிய கூட்டம் என்பதால் லட்சக்கணக்கான தி.மு.கவினர் பொதுக்கூட்டதில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் திமுக அடுத்த 10 ஆண்டுகள் செய்யக்கூடிய திட்டங்களை ஸ்டாலின் பட்டியலிட்டு பேசினார். அதில், ஏழுமுக்கிய துறைகளில் நடைமுறைப்படுத்த உள்ள திட்டங்கள் குறித்தும் ஸ்டாலின் விளக்கமாக எடுத்துரைத்தார். ஸ்டாலின் தெரிவித்த திட்டங்கள் மக்கள் நீதி மய்யம் ஏற்கனவே வெளியிட்டதிட்டங்கள் என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.

கமல்ஹாசன் வெளியிட்ட இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000ரூ ஊதியம் என்பதை “நான்தாரேன் ஆயிரம்” என்றும், 50 லட்சம்பேருக்கு வேலைவாய்ப்பு என்பதை ஆண்டுதோறும் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்றும், 1 கோடிபேரை வறுமைக்கோட்டுக்கு மேல்கொண்டு வருவோம் என்பதை, செயல்கோட்டிற்கு மேல் கொண்டுவருவோம் என்றும், டிஜிட்டல் தற்சார்பு கிராமங்கள் என்பதை பிராட்பேண்ட் (broadband) என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய அறிவிப்புகளாக வெளியிட்டுள்ளதாக மக்கள் நீதிமய்யம் கட்சியினர் தெரிவித்தனர்.

ஸ்டாலின் தெரிவித்த உறுதி மொழிகள் அனைத்தும் காப்பி அடிக்கப்பட்டது

என்றும் “ஸ்டாலின் அவர்களுக்கும் நாங்கள் தான் சொல்லி கொடுக்கிறோம், நாமே தீர்வு என்று நாங்கள் சொன்னால், ஒன்றிணைவோம் வா என்று சத்தமில்லாமல் மக்கள் நீதி மய்யத்திற்கு அழைப்பு வருகிறது என்று கமல்ஹாசன் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசினார்.

மேடை அமைத்து பிரச்சாரம்மேற்கொண்ட ஸ்டாலின், அந்த மேடையின் அளவு, அமர வேண்டிய இடம், இருக்கைகள், அக்கூட்டத்தில் பேச வேண்டியவர்கள் யார், பேச வேண்டிய அம்சங்கள் என்ன, யாரையெல்லாம் பாராட்டவேண்டும் என்று திட்டமிட்டு செயல் படுத்தினார். ஆனால், மக்கள் பிரச்சனைகள் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அறியாதது அக்கட்சியின் 50 ஆண்டுகால அரசியலை கேள்வி குறியாக்கியுள்ளது.

ஒவ்வொரு தொகுதிகளிலும் எத்தனை சமுதாயத்தினர் இருக்கிறார்கள், அவர்களின் ஓட்டுவங்கி எவ்வளவு என அலசி ஆராய்ந்த ஸ்டாலின் மக்கள் பிரச்சனைகளை குறித்து அறியாமல் ஊர்ஊரக சென்று கோரிக்கை மனுக்களை பெற்றும், மூன்றாவது அணிவெளியிட்ட நலத்திட்டங்களை ஸ்டாலினும் வெளியிட்டது ஸ்டாலினின் மிகப் பெரிய தேர்தல் சொதப்பல் என்று தி.மு.கவினரே நொந்தபடி தெரிவித்தனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...