திமுக வெளியிடும் வாக்குறுதிகள், பொய்யும்புரட்டும் கொண்டது

திமுக வெளியிடும் வாக்குறுதிகள், பொய்யும்புரட்டும் கொண்டதாக இருப்பதாக பாஜக., மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

திருப்பரங் குன்றம் திமுக எம்எல்ஏ சரவணன், இன்று (மார்ச் 14) தமிழக பா.ஜ., தலைவர் முருகன் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் முருகன் பேசியதாவது: பா.ஜ.,வில் தினந்தோறும் பிரபலங்கள்இணைவது எங்களுக்கு ஊக்கத்தை கொடுக்கிறது. தேர்தலுக்காக எங்களது பிரசாரவாகனங்கள் இன்று முதல் துவங்குகிறது. ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் திமுக வெளியிடும் வாக்குறுதிகள், பொய்யும்புரட்டும் கொண்டதாக இருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தேர்தல் அறிக்கையை மறந்துவிட்டு, கொள்ளையடிப்பதில் கவனம்செலுத்துகின்றனர். விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தருவதாக கூறினர். ஆனால், நிலத்தை அபகரிக்கதான் செய்தனர். திமுக மீண்டும் ஆட்சிக்குவந்தால், கட்டபஞ்சாயத்து, ஊழல், நிலஅபகரிப்பு தலைவிரித்து ஆடும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

பா.ஜ.,வில் இணைந்த சரவணன் பேசுகையில், ‛பிரதமர் மோடியின் கொள்கைகளை எடுத்துசெல்வதில் நான் நிச்சயம் பக்கபலமாக இருப்பேன். சுமார் 3 மாதங்களாக பா.ஜ.,வில் சேருவது தொடர்பாக பேச்சு நடத்திவந்தேன். திமுக.,வில் எம்எல்ஏ.,வாக இருந்ததால்தான் விருப்பமனு தாக்கல் செய்தேன். திமுக.,வில் வேட்பாளராக வாய்ப்பு அளித்திருந்தாலும், நான் பா.ஜ.,வில் சேர்ந்திருப்பேன்.’ என்றார்.

One response to “திமுக வெளியிடும் வாக்குறுதிகள், பொய்யும்புரட்டும் கொண்டது”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் மிக உயரமான செனாப் ரயில் � ...

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம்: ஜூன் 6ல் திறந்து வைக்கிறார் பிரதமர் உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் நதி ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்� ...

‘பிரம்மபுத்திரா நதியை நிறுத்தினால் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை’ ''பிரம்மபுத்திரா நதியை சீனா தடுத்து நிறுத்தினாலும், இந்தியாவுக்கு எந்த ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

மருத்துவ செய்திகள்

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...