பெட்ரோல், டீசல விலை படிப்படியாக குறையும்

பெட்ரோல், டீசல விலை படிப்படியாக குறையும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ்விலை உயர்வால் சாமானிய மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இதனால் எரிபொருட்கள் மீதானவரியை குறைத்து அவற்றின் விலையை குறைக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்திநிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சர்வதேச சந்தையில் எரிபொருட்கள் விலை உயர்ந்ததால், இந்தியாவும் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியிருந்தது, ஆனால் இது தற்காலிகமானது.

அவை (எரிபொருட்கள் விலை) படிப்படியாக குறையும். விலையைகுறைக்க எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளிடம் நாங்கள் பேசிவருகிறோம். எரிபொருட்கள் மீதான இந்தவரிகள் வளங்களாகும், பொருளாதாரத்தை புதுப்பிக்க மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உதவுகிறது குறிப்பாக கோவிட்-19 உருவாக்கிய சூழ்நிலையில். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலையைகுறைப்பது தொடர்பாக அண்மையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், மாநில அரசுகளும், மத்திய அரசும் கலந்துரையாட வேண்டியவிஷயம். ஏனென்றால் பெட்ரோல் விலையில் மத்திய அரசின்வரிகள் மட்டுமல்ல, மாநில அரசுகளும் கட்டணம் வசூலிக்கின்றன. மத்திய அரசு வருவாய் பெறும்போது, அதில் 41 சதவீதம் மாநில அரசுகளுக்குசெல்கிறது என்று தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...