மேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதமான ஆதரவு பிரசாந்த் கிஷோர்

மேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதமான ஆதரவுள்ளது என்றும் அக்கட்சியே வெற்றிபெறும் எனவும் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துவரும் பிரசாந்த் கிஷோர் பேசியதாக வெளியாகியுள்ள ஆடியோ பாஜக.,வினரிடையே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றுவருகிறது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையே கடும்போட்டி நிலவி வருகிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே வார்த்தைப்போர் வலுத்து வருகிறது. இரு கட்சிகளின் மூத்த தலைவர்களும் காரசாரமாக விமர்சித்து வருகின்றனர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல்வியூகங்களை பிரசாந்த் கிஷோர் தலைமையிலான நிறுவனம் வகுத்துக்கொடுத்து வருகிறது. இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் முன்பு ட்விட்டரில் பதிவொன்றை வெளியிட்டு இருந்தார். அதில் “குறிப்பிட்ட சிலஆதரவு ஊடகங்களின் அனைத்துவிதமான பிரச்சாரங்களால் பாஜக வலுவாகக் காண்பிக்கப்படுகிறது.

உண்மையில், மேற்குவங்கத்தில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை வெல்லவே தடுமாறப்போகிறது. ஒருவேளை சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சிறப்பான வெற்றியைப் பெற்றுவிட்டால், நான் ட்விட்டரிலிருந்து விலகிவிடுகிறேன்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் மேற்குவங்கத்தில் பாஜகதான் வெற்றிபெறும் என பேசியதாக மூத்த தலைவர் அமித்மால்வியா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கிளப்ஹவுஸ் உரையாடலில் பிரசாந்த் கிஷோர் பேசியவிவரம் வருமாறு:

மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் மீது மக்களிடையே கடும்அதிருப்தி உள்ளது. ஆனால் பிரதமர் மோடி மீது அதிருப்தியில்லை. திரிணாமுல் காங்கிரஸ் நடத்திய சர்வேயில்கூட பாஜகவுக்கு ஆதரவு இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்ததேர்தலில் 3 விஷயங்கள் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. நரேந்திரமோடிக்கு ஆதரவான அலை, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ்கட்சி மீதான 10 ஆண்டு அதிருப்தி, ஆளும் கட்சியின் சிறுபான்மை ஆதரவு போக்கு ஆகியவை முக்கியமானவை.

மேற்குவங்கத்தில் சிறுபான்மையினரின் வாக்குகளை கவருவதே அரசியலாக இருந்துவருகிறது. இதன் காரணமாக பட்டியலின மக்கள் வாக்குகள் பாஜகவுக்கு செல்கிறது. மேற்குவங்கத்தில் இந்திபேசுவோர் ஒருகோடி எண்ணிக்கையில் உள்ளனர். இவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர்.

மதுவாஸ் சிறுபான்மையினரில் 75% பேர் பாஜகவுக்கு வாக்களிக்கும் சூழல்உள்ளது. இடதுசாரி ஆதரவாளர்கள்கூட 10 – 15% பேர் பாஜக தான் ஆட்சி அமைக்ககும் என கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளனர். 50 – 55% இந்துக்களின் ஆதரவு பாஜகவுக்கு உள்ளது. பெரும்பான்மையான கருத்து பாஜக தான் ஆட்சிஅமைக்கும் என்பதாக உள்ளது.

இவ்வாறு பிரசாந்த்கிஷோர் அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...