மேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதமான ஆதரவு பிரசாந்த் கிஷோர்

மேற்குவங்கத்தில் பாஜகவுக்கு அபரிமிதமான ஆதரவுள்ளது என்றும் அக்கட்சியே வெற்றிபெறும் எனவும் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துவரும் பிரசாந்த் கிஷோர் பேசியதாக வெளியாகியுள்ள ஆடியோ பாஜக.,வினரிடையே பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றுவருகிறது. ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையே கடும்போட்டி நிலவி வருகிறது. திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே வார்த்தைப்போர் வலுத்து வருகிறது. இரு கட்சிகளின் மூத்த தலைவர்களும் காரசாரமாக விமர்சித்து வருகின்றனர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல்வியூகங்களை பிரசாந்த் கிஷோர் தலைமையிலான நிறுவனம் வகுத்துக்கொடுத்து வருகிறது. இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் முன்பு ட்விட்டரில் பதிவொன்றை வெளியிட்டு இருந்தார். அதில் “குறிப்பிட்ட சிலஆதரவு ஊடகங்களின் அனைத்துவிதமான பிரச்சாரங்களால் பாஜக வலுவாகக் காண்பிக்கப்படுகிறது.

உண்மையில், மேற்குவங்கத்தில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை வெல்லவே தடுமாறப்போகிறது. ஒருவேளை சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சிறப்பான வெற்றியைப் பெற்றுவிட்டால், நான் ட்விட்டரிலிருந்து விலகிவிடுகிறேன்” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் மேற்குவங்கத்தில் பாஜகதான் வெற்றிபெறும் என பேசியதாக மூத்த தலைவர் அமித்மால்வியா ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கிளப்ஹவுஸ் உரையாடலில் பிரசாந்த் கிஷோர் பேசியவிவரம் வருமாறு:

மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் மீது மக்களிடையே கடும்அதிருப்தி உள்ளது. ஆனால் பிரதமர் மோடி மீது அதிருப்தியில்லை. திரிணாமுல் காங்கிரஸ் நடத்திய சர்வேயில்கூட பாஜகவுக்கு ஆதரவு இருப்பதாக தெரியவந்துள்ளது.

இந்ததேர்தலில் 3 விஷயங்கள் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. நரேந்திரமோடிக்கு ஆதரவான அலை, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ்கட்சி மீதான 10 ஆண்டு அதிருப்தி, ஆளும் கட்சியின் சிறுபான்மை ஆதரவு போக்கு ஆகியவை முக்கியமானவை.

மேற்குவங்கத்தில் சிறுபான்மையினரின் வாக்குகளை கவருவதே அரசியலாக இருந்துவருகிறது. இதன் காரணமாக பட்டியலின மக்கள் வாக்குகள் பாஜகவுக்கு செல்கிறது. மேற்குவங்கத்தில் இந்திபேசுவோர் ஒருகோடி எண்ணிக்கையில் உள்ளனர். இவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர்.

மதுவாஸ் சிறுபான்மையினரில் 75% பேர் பாஜகவுக்கு வாக்களிக்கும் சூழல்உள்ளது. இடதுசாரி ஆதரவாளர்கள்கூட 10 – 15% பேர் பாஜக தான் ஆட்சி அமைக்ககும் என கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளனர். 50 – 55% இந்துக்களின் ஆதரவு பாஜகவுக்கு உள்ளது. பெரும்பான்மையான கருத்து பாஜக தான் ஆட்சிஅமைக்கும் என்பதாக உள்ளது.

இவ்வாறு பிரசாந்த்கிஷோர் அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...