இடைதேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது

ஈரோடு கிழக்கு இடைதேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது, மக்களும் நினைக்கிறார்கள். இடைத் தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து 2 நாளில் அண்ணாமலை அறிவிப்பார் என பாஜக மாநில துணைத் தலைவர் கேபி ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவது பற்றி இதுவரை அறிவிக்கப் படாத நிலையில், பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்போம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அதையடுத்து ஜான்பாண்டியன், ஏசி சண்முகம் ஆகியோரும் பாஜக நிலைப்பாடே தங்கள்நிலைப்பாடு என்கிற ரீதியில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பாஜக மாநில துணைத்தலைவர் கேபி ராமலிங்கம், பாஜக போட்டியிடவேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது என பேசியுள்ளார். ஈரோடு கிழக்குதொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில், மறைந்த எம்.எல்.ஏ திருமகன் ஈவெராவின் சகோதரர் சஞ்சய்சம்பத் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் இன்று காங்கிரஸ் அலுவலகத்தில், விருப்பமனுவை தாக்கல் செய்துள்ளார். அதேபோல, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரைநிறுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்புபல்வேறு கட்சிகளின் தலைவரிடம் ஆதரவுகேட்டு வருகிறது. இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம் தாங்களும் போட்டியிட இருப்பதாக அறிவித்தார். மேலும், பாஜக போட்டியிடவிரும்பினால், நாங்கள் முழு ஆதரவு தருவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

இதைதொடர்ந்து கூட்டணி கட்சியினரிடையே அதிமுகவின் இரு தரப்பினரும் ஆதரவு திரட்டி வருகிறார்கள். பாஜக தலைமைஅலுவலகத்தில் நேற்று அண்ணாமலையை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என இரு தரப்பினரும் சந்தித்து ஆதரவுகோரினர். இந்நிலையில் இன்று ஓ.பன்னீர்செல்வம் குஜராத்சென்றுள்ளார். அங்கு பாஜக முக்கிய தலைவர்களுடன் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஈரோட்டில் பாஜக மாநில துணைத்தலைவர் கேபி ராமலிங்கம் செய்தியாளர் சந்தித்து பேசுகையில், “ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணையவேண்டும் என்பதே எங்கள்எண்ணம். எனினும், இரு அணிகளையும் இணைக்கும்வேலையில் பாஜக ஈடுபடாது. திமுகவிற்கு எதிராக உள்ள அணிகள் ஒன்றாகச்சேர வேண்டும். அதிமுகவின் இரு அணிகளும் இணையவேண்டும்”

இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வேண்டும் என நாடே எதிர்பார்க்கிறது, மக்களும் நினைக்கிறார்கள். இடைத்தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து 2 நாளில் அண்ணாமலை அறிவிப்பார். காலஅவகாசம் உள்ளதால், இருஅணிகளும் ஒன்றாககூட சேரலாம்” எனத் தெரிவித்துள்ளார் கேபி ராமலிங்கம். பாஜக போட்டியிடவேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள் என பாஜக துணைத்தலைவர் கேபி ராமலிங்கம் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாறும் நிலைப்பாடு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு தேர்தல் பணிக்குழுவை அமைத்த பாஜக, தாங்கள் போட்டியிடுவது பற்றி இதுவரை அறிவிக்கவில்லை. ஈபிஎஸ் அணி போட்டியிட தயாராவதால் பாஜக போட்டியிடாது எனக் கூறப்பட்ட நிலையில், ஓபிஎஸ், பாஜக போட்டியிட்டால் ஆதரவு எனத்தெரிவித்த நிலையில், பாஜகவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படத் தொடங்கியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

பொக்ரானில் முப்படை போர் பயிற்ச ...

பொக்ரானில் முப்படை போர் பயிற்சி: பிரதமர் நேரில் பார்வை ராஜஸ்தான் பொக்ரானில் இன்று 'பாரத் ஷக்தி' என்ற உள்நாட்டில் ...

இது தான் ஒரு தேசத்தின் கவுரவம்

இது தான் ஒரு தேசத்தின் கவுரவம் '' ஐ.நா., விவாதத்தில் எங்களிடம் இருந்து கச்சாஎண்ணெய் வாங்குவது ...

திமுகவின் வெறுப்புப் பேச்சு

திமுகவின்  வெறுப்புப் பேச்சு திமுக எம்பி. ஆ.ராசா ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில் ‘இந்தியா ...

மருத்துவ செய்திகள்

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...