‘சமஸ்கிருதம் தேசிய மொழி: பரிந்துரைத்தார் அம்பேத்கர்’

”சமஸ்கிருதத்தை, நாட்டின் அதிகாரப்பூர்வ தேசியமொழியாக அறிவிக்க, அம்பேத்கர் பரிந்துரை செய்தார்,” என, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே நேற்று தெரிவித்தார்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ்தாக்கரே தலைமையில், சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.அம்பேத்கரின், 130வது பிறந்தநாளான நேற்று, மஹாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள, தேசிய சட்டபல்கலைக்கழகத்தில், புதியகட்டட துவக்க விழா நடைபெற்றது.இதில், மாநிலமுதல்வர் உத்தவ் தாக்கரே, மத்திய அமைச்சரும், பா.ஜ., தலைவருமான நிதின் கட்கரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே உள்ளிட்டோர், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி பாப்டே பேசியதாவது:இன்றைய நிகழ்ச்சியில், எந்தமொழியில் உரையாற்றுவது என்பது குறித்து, காலையில் தீவிரமாக யோசித்தேன்.

இன்றைய தினம், அம்பேத்கரின் பிறந்ததினம். அது நினைவுக்கு வந்ததும், நம் அன்றாட வாழ்க்கையில் நாம்பேசும் மொழிக்கும், பணியின்போது நாம் பயன்படுத்தும் மொழிக்கும் நீண்டநாட்களாக உள்ள முரண்குறித்து நினைவு வந்தது.

இதை அம்பேத்கர் முன்பே எதிர்பார்த்துள்ளார். எனவே தான், அவர் சமஸ்கிருதத்தை நாட்டின் அதிகாரப்பூர்வ தேசியமொழியாக அறிவிக்க பரிந்துரைத்தார்.வட மாநிலத்தவர்கள், தமிழ்மொழியை தேசிய மொழியாக ஏற்க மாட்டார்கள். அதே போல, தென் மாநிலத்தவர்கள், ஹிந்தியை தேசியமொழியாக ஏற்க மாட்டார்கள் என்பதை, அம்பேத்கர் அன்றே உணர்ந்துள்ளார்.சமஸ்கிருதத்திற்கு இரு பகுதிகளிலும் பெரும் எதிர்ப்பு இருக்காது என்பதால் இந்த பரிந்துரையை அவர் முன்வைத்துள்ளார். ஆனால் அது வெற்றி பெறவில்லை.இவ்வாறு, அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய்

உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...