‘சமஸ்கிருதம் தேசிய மொழி: பரிந்துரைத்தார் அம்பேத்கர்’

”சமஸ்கிருதத்தை, நாட்டின் அதிகாரப்பூர்வ தேசியமொழியாக அறிவிக்க, அம்பேத்கர் பரிந்துரை செய்தார்,” என, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே நேற்று தெரிவித்தார்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ்தாக்கரே தலைமையில், சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது.அம்பேத்கரின், 130வது பிறந்தநாளான நேற்று, மஹாராஷ்டிராவின் நாக்பூரில் உள்ள, தேசிய சட்டபல்கலைக்கழகத்தில், புதியகட்டட துவக்க விழா நடைபெற்றது.இதில், மாநிலமுதல்வர் உத்தவ் தாக்கரே, மத்திய அமைச்சரும், பா.ஜ., தலைவருமான நிதின் கட்கரி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே உள்ளிட்டோர், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி பாப்டே பேசியதாவது:இன்றைய நிகழ்ச்சியில், எந்தமொழியில் உரையாற்றுவது என்பது குறித்து, காலையில் தீவிரமாக யோசித்தேன்.

இன்றைய தினம், அம்பேத்கரின் பிறந்ததினம். அது நினைவுக்கு வந்ததும், நம் அன்றாட வாழ்க்கையில் நாம்பேசும் மொழிக்கும், பணியின்போது நாம் பயன்படுத்தும் மொழிக்கும் நீண்டநாட்களாக உள்ள முரண்குறித்து நினைவு வந்தது.

இதை அம்பேத்கர் முன்பே எதிர்பார்த்துள்ளார். எனவே தான், அவர் சமஸ்கிருதத்தை நாட்டின் அதிகாரப்பூர்வ தேசியமொழியாக அறிவிக்க பரிந்துரைத்தார்.வட மாநிலத்தவர்கள், தமிழ்மொழியை தேசிய மொழியாக ஏற்க மாட்டார்கள். அதே போல, தென் மாநிலத்தவர்கள், ஹிந்தியை தேசியமொழியாக ஏற்க மாட்டார்கள் என்பதை, அம்பேத்கர் அன்றே உணர்ந்துள்ளார்.சமஸ்கிருதத்திற்கு இரு பகுதிகளிலும் பெரும் எதிர்ப்பு இருக்காது என்பதால் இந்த பரிந்துரையை அவர் முன்வைத்துள்ளார். ஆனால் அது வெற்றி பெறவில்லை.இவ்வாறு, அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

உடல் எடை குறைய

தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ...